பள்ளிக்கு ஏன் தாமதமானது?

நான் சீக்கிரம் எழவில்லை,ஏனென்றால்நான் மிகவும் களைப்படைந்திருந்தேன்;நான் மிகவும் களைப்படைந்திருந்தது,ஏனென்றால்நான் தாமதமாக உறங்கச் சென்றேன்;நான் தாமதமாக உறங்கச் சென்றது,ஏனென்றால்எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது;எனக்கு வீட்டுப்பாடம் இருந்தது,ஏனென்றால்ஆசிரியர் அதை செய்யப் பணித்தார்;ஆசிரியர் அதை செய்யப் பணித்தது,ஏனென்றால்எனக்குப் பாடம் புரியவில்லை;எனக்குப் பாடம் புரியாததுஏனென்றால்நான் கவனிக்கவில்லை;நான் கவனிக்காதது,ஏனென்றால்நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;நான் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது,ஏனென்றால்நான் ஒரு மேகத்தைக் கண்டேன்.ஐயா, நான் தாமதமாக வந்ததற்குக் காரணம்,நான் ஒரு மேகத்தைக் கண்டதுதான். ஸ்டீவ் டர்னர் மொழிபெயர்ப்பு …

தற்பிறப்பு

சிறுவயதில் வீட்டில் ஏதாவது குழப்படிகள் செய்துவிட்டால் அப்பா அடிப்பார். விதிமுறைகள் கொண்ட நியாயமான அடிகள் விழும். நான் அடிக்குப் பயந்து வீட்டைச் சுற்றி ஓடுவதுண்டு, வீடு போதவில்லையென்றால் பக்கத்து வீடுகளுக்கும் சென்று ஓடுவதுண்டு. எங்களது வீட்டுக்குப் பக்கத்து வளவு ஒரு வாழைத் தோட்டம். சிப்பாலன் ஐயா என்பவருக்குச் சொந்தமானது. விரதகாலங்களில் தலைவாழை இலை வெட்டவும் லீவு காலங்களில் ஆமி – இயக்கம் விளையாடவும் அத்தோட்டத்தில் திரிவதுண்டு. நேர்த்தியாகச் சதுரஞ் சதுரமாக …

மூப்பரின் உளி

இதுவரை பிறந்தவர்க்கும் இனிப் பிறக்கவிருப்பவருக்கும் நெஞ்சினுள் ஒரு சின்னஞ்சிறு கருங்கல் அளிக்கப்பட்டிருக்கிறது. அது கூடியுருண்ட மாபெரும் கருங்கல் மலையின் சிறு பொடி. அதனை மலையென ஆக்கும் பணி கவிஞர்களுடையது. அக்கூட்டின் இழைவை உளிமுனையால் ஒட்டும் மொழி எவ்வளவு நுட்பமோ அதேயளவு அவ்வளவு துல்லியமான இணைவும் கொள்ள வேண்டியது. துல்லியம் என்பதிரு கண்ணினுட் பார்வை. க. மோகனரங்கனின் கவிதை மொழி அவ்வுளிகளில் கூர்தக்கது. அவரின் கவிதைப் பிராகரத்தின் அகற்சுடர்கள் கூட உளியாலானவையோ …