மலர்தலின் எந்த அமைதியுமின்றி
தர்மு பிரசாத்திடம் சுகுமாரனின் கவிதைகளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு அவதானத்தைச் சொன்னேன். இன்றளவும் சுகுமாரனின் முதற் கவிதை நூலான கோடை காலக் குறிப்புகள் தமிழ் வாசிப்புச் சூழலால் தொடர்ந்து நினைவு கூரப்படுகிறது. அவர் அந்தத் தொகுதியின் கவிதைகளில் வெளிப்பட்ட சீற்றமும் கொந்தளிப்புமான இளங் கவியாகவே இன்றளவும் முதன்மையாக மதிக்கப்படுகிறார். அது ஒரு வகையில் எதிர்மறையானது. அவரது நீண்ட நெடிய இன்றளவான எழுத்துகள் மீது மீண்டும் சிறிய வட்டமே …
