யசு, நீ மட்டும்
மூடப்பட்டிருக்கும் புத்தரின் இமைகளுக்குள் நித்தியமாய் உறையும் யசோதரையின் மாசற்ற துயரம் என்பது ஆணுலகு உண்டாக்கியிருக்கும் ஞானம் என்ற கருத்துருவாக்கத்தின் மீதான தத்துவ விசாரணை. இத்தனை நூற்றாண்டுகளாய் நாம் அறியும் ஞானம் என்பது பெண் வெறுப்பின் அல்லது விலகலின் பின்னே சாத்தியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன பெரும்பாலான கதைகள். மனித வாழ்வின் இணைவுக்கு அல்லது அதன் மேன்மைக்கானதாக இருக்க வேண்டிய கருவிகளே எதுவாயிருந்தாலும். ஞானம் என்பது தனித்திருக்கும் பொறுப்பின்மையின் விளைவல்ல. அது இவ் வாழ்வின் …
