மூன்று ஆசிரியர்கள்

இந்த நாள் போல ஒன்று எனக்குத் திரும்ப நிகழ முடியாது என்று தோன்றுகிறது. அரிதாகவே தன் கல்லுதட்டை இளக்கும் ஒரு தெய்வம் என்னைத் திரும்பிக் கூர்ந்து பார்த்துப் புன்னகைத்தது போல ஒரு நாள். காலையில் எழுந்த போது வட்ஸ் அப்பில் தர்மு பிரசாத் ஒரு லின்கை அனுப்பியிருந்தார். ஜெயமோகன் தளத்தில் என்னைப் பற்றிய தமிழ் விக்கி குறிப்பை பகிர்ந்திருந்தார். ‘கிரிசாந்’ என்கிற பிரகிருதி தமிழ் இலக்கிய உலகில் வாழ்கிறான் என …

வாசலிலே கிருசாந்தி

அண்மையில் செம்மணிக்கு அருகில் யாழ்ப்பாணத்து வரவேற்பு வளைவில் இடம்பெற்ற ‘வாசலிலே கிருசாந்தி’ எனும் செம்மணி தொடர்பான கவிதைகளின் புத்தக வெளியீட்டிலும் கிருசாந்தியின் நினைவு கூரலிலும் பங்குபற்றியிருந்தேன். எழுநா வெளியீடாக வந்திருக்கும் இந்தக் கவிதை நூலிலிருந்து நிலாந்தனின் ‘அமைதி நகரின் மனம்பெரிகள்’ கவிதையை அங்கு வாசித்தேன். கவிதை வாசிப்பின் சிறு முற்பகுதி விடுபட்டிருக்கிறது. எஞ்சியதை பதிவிட்டிருக்கிறேன். செழியனின் கவிதை வரியைப் போல, “எஞ்சியிருப்பவை கரித் துண்டுகளே ஆயினும் எழுதியே முடிப்போம்”. ஒளிப்படம் …

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …

உடுக்கொலியும் பறையும்

விடுதலைப்போராட்டத்தின் உள்ளோடும் உணர்ச்சிகள் வெளிப்படும் மொழி ஒருவகையில் சன்னதமும் உருவும் கொண்டது. அதற்குத் தன் மொழியை வெகுசன மொழியையும் பைபிளினதும் உரைநடையினதும் கூர்மையான சில இணைவுகளைப் பயன்படுத்தி தனக்கென ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. உள்ளூர்த் தன்மையும் பரிசோதனையும் இணையும் வெளியில் நிலாந்தனின் மொழி கருக்கொண்டது. நிலாந்தனது கவிதைகள் பெரும்பாலும் நெடியவை. மனிதர்களுடைய அலைச்சலையும் துயரையும் போலவே. அவரது நெடுங்கவிதைகள் நெடுக உருவேற்றும் மொழிச்சந்தமொன்று நிகழ்ந்தபடியே இருக்கும். அது ஓடும் …

நுதம்பும் சேறிடை மனக்கேணியில்

1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ஊர்வசி, செல்வி, ஆழியாள் போன்றோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துள் பெண்களின் பாத்திரம் உருக்குலைந்து போக, அதிலிருந்து மாற்றான நோக்குகளைக் கொண்ட உளவமைப்புகளையும் பிரச்சினைகளையும் எழுத்தில் முன் கொணர்ந்தனர். அவை பெரும்போக்கில் எழுந்த தேசிய …