இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்: கடிதம்

அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டுரை. ஆழமாக ஊடுருவிய இந்த இரவின் சரியாக 00.54 இல் இதை முடித்தேன். தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக வந்த சீறீதரன் தன்னை நிலைநாட்ட, மாணவர்களையும் அழைத்துச் செய்யப்பட்ட ஒரு உப்பு சப்பற்ற போராட்டத்தில் இழுத்து செல்லப்பட்ட பல்கலைகழக மாணவரும், அவரை இழுத்து சீருடை அணியாத காவலரும் என்று மனதில் கட்டுரை பல கோணங்களில் விமர்சனமாக படர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த மாணவர் ஒன்றியம் எமதுபள்ளிகால மாணவர் …

எப்போதும்

ஒரு திசையில் கொடி சுழற்றினர்மறு திசையில் கொடி பிடித்தனர் ஒரு வானத்தின் கீழ் எல்லாம் நிகழ்கின்றன ஒரு காற்று வீசுகிறதுமறு காற்று எரிகிறது ஒரு வழியில் மலர் தூவப்பட்டிருக்கிறதுமறு வழியில் கண்ணீர் இறைக்கப்பட்டிருகிறது ஒரு மரத்தின் கீழ் எல்லாம்சொரிகின்றன ஒருவர் மறக்கிறார்இன்னொருவர் மறக்க மாட்டேன் என்கிறார் ஒரு கனவு பலிக்கிறதுமறு கனவு தீகின்றது ஒரு பூமியில் எல்லாம் விளைகின்றன பொன்னும் பிணமும்சாவீடும் மங்களமும். (2021) ஒளிப்படம் (2024) : பிரபாகரன் …

காற்சட்டைக் கலாசாரம்

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் காற்சட்டையுடன் நுழைந்தவர்களை வாயில் காப்பாளர்கள் மறித்து உட்செல்லவிடாமல் தடுத்தமை சமூக வலைத்தளங்களிலும் வெகுசன வெளியிலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவான உரையாடல்களில் உட்செல்ல முயன்ற தரப்பினரை மலினமாகச் சித்தரித்து தரக்குறைவாக ஏசி பல்வேறு கருத்துகள் பரிமாறப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் யாழ்ப்பாண மனநிலை ஆடை தொடர்பான வரையறைகளில் கடந்த காலத்தில் எவ்விதம் நடந்து கொண்டது, அதன் பொதுப்புத்தி எப்படியானது என்பதை விளங்கிக் கொள்வோம். சம்பவம் …

இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஆயுத வழிப்போராட்டமும் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இதன் விளைவுகள் ஆழமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சரியாக மதிப்பிடப்பட்டு அதன் மூலமான சமூக அசைவென்பது நிகழவில்லை. பல்வேறு இழுவிசைகளினாலும் நாட்டின், சர்வதேசத்தின் நிலமைகளினாலும் தமிழ் மக்கள் தம்மைத் தாம் விரும்பிய திசையில் அசைத்துச் செல்வது இன்னமும் முடியாததொன்றாகவே இருக்கிறது. சமூக பண்பாட்டு அரசியல் தளங்களில் இடம்பெற்ற மாற்றங்கள், மக்களை குவிமையமாகத் திரள்வதிலிருந்து விலத்தி …

மீண்டும் ஒரு மாணவர் புரட்சி

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நான் உயர்தரம் படித்துக்கொண்டிருந்த காலத்தில் (2012 ) ஒரு ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த மாணவன் நயினாதீவுக்கு சுற்றுலாவுக்குச் சென்று விட்டு வரும் போது ஜெட்டியடியில் வைத்து வாகனத்தை திருப்பிய பொழுது கால் இடறி விழுந்து டயரில் தலை நசுங்குண்டு இறந்து போனான். இதைக் கேள்விப்பட்டவுடன் மிகவும் பரபரத்துப் போனேன். கைகால்களெல்லாம் துடிக்க சைக்கிளில் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன் ஏற்கனவே இருநூறு பேருக்கு மேல் எங்கள் பிரிவு நண்பர்களும் பழையமாணவர்களும் …

அறமும் கல்வியும் – வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டம்

வேலையில்லாப்பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. இவ்வளவு காலம் நான் பல்கலைக் கழக மாணவர்களின் பல்வேறு நிலைப்பாடுகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றினால் குறிப்பிடும்படியான  மாற்றம் கூட ஏற்படவில்லை. பல்வேறு காரணங்களின் தொடர்ச்சியும் நீட்சியுமாகவே இந்தப் போராட்டம் இன்றுவரை கவனிப்புக் குறைந்த போராட்டமாகவும் அழுத்தத்தை உருவாக்க மிகவும் கஷ்டப் படவேண்டியுமிருக்கிறது என்று கருதுகிறேன். நான் இதற்கு முன் வைத்த விமர்சனங்கள் யாவும் …

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது?

( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம், …