அற்பத்தனத்தை அகங்காரத்தால் எதிர்கொள்ளல்
நாளைய தினம் தமிழ் புத்தகங்கள் மீது இலங்கைச் சுங்கம் காட்டி வரும் தடுத்து வைப்பு / தடை நிலமையைக் கண்டிக்கும் போராட்டம் ஒன்றை நிகழ்த்த சில நாட்களுக்கு முன்னர் நானொரு அழைப்பை என் தளத்தில் எழுதியிருந்தேன். வரும் ஞாயிறு காலை பத்து மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி கோயிலின் முன்பாகவும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாகவும் ஒன்று கூடுமாறு கோரியிருந்தேன். ஒரு எழுத்தாளனாக, சக குடிமகனாக. யாரும் வராமல் …
