கொடிறோஸ் : குறுநாவல்

அண்ணா வணக்கம், நான் மாரி. தன்னறம் நூல்வெளி அலுவலகத்தில் பிரிண்ட் அவுட் வடிவிலான ஒரு நூல் கொத்து கண்டேன். சிவராஜ் அண்ணனிடம் அது என்னவென்று வினவ அவர் இதை சும்மா படித்துப் பார் என்றார். வாங்கி பையிலிட்டுக்கொண்டு வெளியூர் பயணமானேன். சும்மா கொடுத்தால் நான் படிக்க மாட்டேன் நீங்கள் எனக்கு ஒரு டெட் லைன் கொடுங்கள் நான் அதை கணக்கில் வைத்து படித்து சொல்றேன் என்றேன். மூன்று நாட்கள் அவகாசம் …

தவளைத் தாவல்: கடிதம்

லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், கவிதையின் முதற் சொற்கள் கலையாடிகளின் வாயிலிருந்து எழும் உச்சாடனங்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்புகிறேன். அதன் ஆதித்தன்மை இன்றளவும் மாறுபடவில்லை. ஒரு வடிவத்தின் எல்லைகள், பிறப்பில் மனித உடல் ஆவதைப் போல் நிலைகொள்பவை. அவற்றின் உள்ளுயிரை வேறுவேறு வகையில் கற்பனை செய்துகொள்ள முடியும் என்றாலும் வடிவம் பற்றிய எல்லைகள் அதன் பிறப்பியல்பால் மட்டுப்பாடு கொண்டவை. சொல்லில் திகழும் கலையே கவிதை. இதற்கு மாற்றான பார்வைகள் …

மெய்த்துயர்

வணக்கம் கிரிசாந், இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா? கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் காண்பது? உங்கள் கவிதைகள் எந்த கோட்பாட்டின் பிரகாரம் அமைந்தது? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், தத்துவம் எனும் அறிவுத் தளத்தில் நானொரு வாசகன் மட்டுமே. தத்துவங்களை முறையாகவோ அல்லது முறைசாரமலோ பயின்றவனல்ல. எனது ஆர்வத்தின்பாற்பட்டு …

எப்பொழுதும் கவிஞன்

ஒரு கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள். பொதுவாக கலை சார்ந்த செயல்களை பகுதி நேரமாகவே தேர்வு செய்கையில் அதற்கு மறுதலையாக கவிஞனாக வேண்டும் என்று முடிவெடுத்தது பெரிய விடயம். ஆனால் சில காலங்கள் உங்கள் இலக்கிய செயற்பாட்டை காணவில்லை. இடைப்பட்ட இந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், உங்கள் தொடர்ச்சியான கேள்விகள் மகிழ்ச்சியையும் தொடர்ந்து விவாதிக்கும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. நான் கவிஞனாகுவது அல்லது எழுத்தாளராகுவது …

இடைநிலை வாசகர்கள்: ஒரு கடிதம்

அன்புள்ள கிரி, உங்கள் கடிதத்துக்கு நன்றி. இன்னுமொரு கேள்வி. நல்ல வாசகர்களை அவதானித்துப் பார்க்கும் போது சிறு வயதில் இருந்தே வாசிப்பு பழக்கத்திற்கான ஏதோ ஒரு ஊக்கி அவர்களுக்கு இருந்து இருக்கிறது. உதாரணமாக வீட்டில் யாரோ ஒருவர் வாசிப்பவராக இருக்கிறார்கள். வீட்டில் நூலகமோ புத்தக சேகரமோ இருக்கிறது இப்படியாக சில காரணங்கள் நிறைய வாசகர்களால் சொல்லப்படுகிறது. ஆனால் இடையில் வாசிப்புக்கு வந்து சேரும் நிகழ்வுகள் அபூர்வமாக இருக்கிறது. இந்த இடையில் …

பரா லைட்: வாசகர் கடிதம்

காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது …

வாசகர்கள் எனும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள்

எந்தவொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு அறிவுத் துறையையும் ஆழப்படுத்தவும் விரிவான சமூக அறிதலையும் ஏற்படுத்துவது அத் துறைசார் வாசகர்களே. அவர்களே கேள்விகளின் மூலம் சந்தேகங்களையும் விடுபடல்களையும் நீக்குபவர்கள். அப்பங்களிப்பின் வழி அவர்கள் சமூகத்தின் அன்றாட சராசரித்தனத்திலிருந்து விலகி தனித்து ஒலிக்கிறார்கள். அவர்களே பெருந்திரளுக்கும் அறிவியக்கத்துக்குமிடையிலான நீள் பாலங்கள். பொதுவான உரையாடல்களைக் கவனிக்கும் போது உடனே புலப்படுவது ஒன்று தான், எந்த ஒரு துறை சார்ந்து விமர்சிக்கின்றோமோ அது தொடர்பில் குறைந்த பட்ச …

கன்னி அம்மன், அப்பாவும் கோவர்த்தன கிரியும்: கடிதம்

கன்னி அம்மன் வயல்களில் சப்த கன்னிகளுக்கு கோயில் வைப்பார்கள். ஏழு பெண்கள். அவர்களுக்கும் நாகதம்பிரானுக்கும் அறுவடை மற்றும் விதைப்பு காலத்தில் தான் சிறப்பு வழிபாடு. அதுவரை அவர்களின் அறையில் தூக்கணாம் குருவியும் கூடு கட்டலாம். அவ்வளவும் சுதந்திரமாண பிராமணர் அற்ற கோவில்கள். அவை போபவர் வருவபர் எல்லாம் பூசை செய்தாலும், ஆரம்பத்தில் மரத்தின் கீழ் தன்னை வைத்த வயல்காரனின் பிள்ளை மீது அவளுக்கை ஒரு காதல் அதுவும் பக்தியை பாலனிடம் …

கனவுச் சொல் : முதற் கடிதம்

இந்தக் கவிதை இன்றுதான் வாசித்தேன்.. ஒரு தனிமையில் இருந்த மனிதன் அனுப்பிவைத்த இசைத் தொகுப்பு.. காமம் சொல்லி .. தோல்வி கண்டது… அப்ப காதலியை நினைச்சு சுயமைதூனம் செய்து எழுதுறான் என்று கூட யோசிச்சன்.. அது ஒரு தோல்வியை அல்லது அடையப்பாடாத இலக்கு நோக்கிய வேதனையா என்று பாத்தன் அதுவும் இல்லை கடைசியில் இடப்பட்ட முத்தங்கள் காதலின் எச்சங்கள் தான்… இது காதலிக்கு அனுப்படால் seductive art என்றும் பாக்க …