‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

(கருணாகரன்) ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார். ‘…இரவு; இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்; நாளைக் காலையில் சூரியன் உதிக்குமா என்பதில் கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள் தம் அர்த்தத்தை இழந்தவைதான்..’ ‘… வெளியே பதற்றமற்று மௌனமாய் நிற்கும் மரங்களின் நிழல்கள் கீழே கிழிந்து போயுள்ளன…’ …

புத்தகம் வாங்க..

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள குயின்சி புத்தகசாலையில் வாசகர்கள், நண்பர்கள் பெற்றுக் கொள்ளலாம். பிரதி ஒன்றின் விலை 1000 rs.

கவிதை தெய்வமன்றோ

தமிழில் சொற்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மதிப்பு கவிதை. எம்மொழியையும் போல. ஆதியில் வார்த்தை இருந்தது என்பது பைபிளின் நம்பிக்கையும் கூட. அவ்வார்த்தையே தேவனோடு இருந்தது. தேவனாகவும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. தமிழில் தெய்வங்களை அழைக்கும் பதிகங்கள் கவிதைகளாக இருந்த பண்பாட்டு புறச்சூழல் கவிதைகளுக்கு உண்டு. எனது கவிதைத் தொகுதியான வாழ்க்கைக்குத் திரும்புதலை என் ஆசிரியர்களென நான் வகுத்துக் கொண்ட அனைவருக்கும் அளித்து விட்டேன். அதில் முதலாவது தொகுதியை என் கையால் …

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …

கவிதைச் சுவரொட்டி

ஓஷோவின் சொல்லுண்டு “உண்மை சந்தையிடத்துக்கு வந்தாக வேண்டும்” என்று. நான் அதை ஏற்பவன். இலக்கியமோ கலையோ அது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. ஒரு குறுங்குழுவின் தனிக்களியல்ல. மொத்த மானுடத்தினதும் பண்பாட்டினதும் திரண்ட அறுவடை. அதில் ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும். எனது கவிதைகள் சிலவற்றை நண்பர்கள் சுவரொட்டிகளாகச் செய்து வருகிறார்கள். அதன் முதலாவது சுவரொட்டி இது.

திகதி மாற்றம்

எனது கவிதை நூலான வாழ்க்கைக்குத் திரும்புதலின் வெளியீட்டு நிகழ்வினை மழையினாலும் புயலினாலும் உண்டான இடர்க்கால நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரும் கிழமைக்கு மாற்றியிருக்கிறோம். 01. 12. 2024 இடம்பெற இருந்த நூல் வெளியீடு 08. 12. 2024 அன்று காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறும். அனைத்து நண்பர்கள் மற்றும் இலக்கிய வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

பித்தும் கவிதையும் : 02

பத்தொன்பது வயதில், கவிஞரும் ஓவியரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் அவர்களிடம் பேச்சு மூல ஆங்கிலம் கற்கச் சென்றேன். அவருடன் அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிறைய உரையாடியிருக்கிறேன். கவிதைகளை வாசித்து அபிப்பிராயங்கள் சொல்லுவார். ஓர் ஆளுமையாகவும் ஆசிரியராகவும் என்னை அவர் ஈர்த்தார். றமணன் அண்ணாவும் நிலாந்தன் அண்ணாவும் மேடைப் பேச்சில் மிகவும் வசீகரமானவர்கள். உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளிவந்த பின் இங்கே பல்கலைக்கழகம் கிடைக்க வாய்ப்பில்லை என்றானது. இரண்டாம் …

பித்தும் கவிதையும் : 01

கவிதையால் மட்டுமே அடங்கக்கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு. * வைரவர் கோயிலின் திருவிழாக் காலங்களில் குஞ்சுக்கண்ணா பாடும் தேவாரங்களைக் கேட்டு நின்றது கவிதையை அறிவதன் தொடக்க நினைவாக இருக்கிறது. எதிர் நிற்கின்ற தெய்வ உருவைக் குரலால் அழைத்துச் சொல்லால் உயிரளித்து “ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்..” என்று நெஞ்சறைந்து உரிமையுடன் தெய்வமெழ வைக்கும் அந்தத் தேவாரங்களின் சொற்களிலே கவிதை …

வாழ்க்கைக்குத் திரும்புதல் : அறிமுக நிகழ்வு

எனது முதலாவது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதல் குமாரதேவன் வாசகர் வட்ட முதல் வெளியீடாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இலக்கிய வாசகர்கள், நண்பர்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கிறேன்.

வாழ்க்கைக்குத் திரும்புதல்

எனது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதலை வாங்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள் எனது மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப் மூலமோ தொடர்பு கொண்டு தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் அனுப்பிய பின் பற்றுச் சீட்டை மின்னஞ்சல் மூலமோ வட்ஸ் அப்பிலோ உங்கள் முகவரியுடன் இணைத்து அனுப்புங்கள். தபால் மூலம் புத்தகம் உங்களிடம் சேரும். நூலை வாசித்த …