வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’

25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம், அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும் போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி பெறுகிறார். பல எழுத்தாளர்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலை தங்கள் நாவல்களின் எழுதியிருந்தாலும் நவீனமும் பழமையும் கலந்த கவித்துவம் செறிந்த அதே நேரம் எந்த நிலை வாசகரையும் சலிப்படையச் செய்யாத ஒரு தேர்ந்த மொழிநடையில் இது …

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

அனைவருக்கும் வணக்கம், ஒரு மொழியின் இலக்கியத்தில் எழுதப்படும் சொற்கள் ஒவ்வொன்றும் அச் சமூகத்தின் பண்பாட்டு ஆழ்மனத்தின் நரம்புகளும் குருதியும் போன்றவை. இலக்கிய மரபின் அடிப்படையில் ஒருவர் எழுத்தில் தன்னை தொகுத்துக் கொண்டு முதலாவது நூலை முன்வைக்கும் பொழுது தன் ஆசிரியர் நிரையை முன்வைப்பது பொருத்தமானது. ஒரு எழுத்தாளருக்கு அவர் என்னவாக ஆகிறார், எதைக் கொண்டு தன் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வகுத்துக் கொள்கிறார் என்பதன் சிந்தனைத் தொடர்ச்சியை முன்வைப்பது அவரைப் புரிந்து …

நன்றியின் நிழல்: ஒரு குறிப்பு

வாழ்க்கைக்குத் திரும்புதல் கிரிசாந்தினுடைய முதலாவது கவிதைத் தொகுதி, குமாரதேவன் வாசகர் வட்ட வெளியீடாக வந்திருக்கிறது. முகநூலிலும் பிற ஊடகங்களிலும் நாளாந்தம் கவிதைகள் என எழுதப்படுகின்றவற்றில் எது கவிதை எனத் தேடிச் சலிக்கின்ற கவிதை மனங்களுக்கு ஆத்மார்த்தமான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக இதில் உள்ள அகம் சார்ந்த கவிதைகள், நிஜ உலகின் நிகழ்வெளியில் நின்று மனதைப் பிய்தெடுத்து ஒரு தனித்த வெளியில் மனதை மிதக்க விடுகின்ற பித்து …