வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’
25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம், அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும் போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி பெறுகிறார். பல எழுத்தாளர்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலை தங்கள் நாவல்களின் எழுதியிருந்தாலும் நவீனமும் பழமையும் கலந்த கவித்துவம் செறிந்த அதே நேரம் எந்த நிலை வாசகரையும் சலிப்படையச் செய்யாத ஒரு தேர்ந்த மொழிநடையில் இது …
