அன்னையர் அறமிழத்தல்
அறம் என்றால் என்ன என்பதற்கு ஜெயமோகன் தன் உரையொன்றில் கூறிய கதையொன்று அறத்தின் அடிப்படையைத் தீர்க்கமாக முன்வைப்பது. தோமஸ் அல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்த பின்னர் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும் அதன் சக்தியை மக்களுக்குக் காட்டவுமென ஒரு முதிய யானையை விலைக்கு வாங்கி அதன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்று காட்டினார். எடிசன் செய்ததன் பின்னுள்ள நியாயங்களைப் பற்றி ஜெயமோகனின் நண்பரொருவர் சொல்லிய வாதங்களில் முதலாவது அதுவொரு முதிய யானை. …
