ஈழத்துக் கவிதைகள் : கடிதம்

கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில் அபாரமான மொழிவெளிப்பாடு. கூடவே ஈழத்தின் கவிதையின் கடந்த கால போதாமைகளைச் சுட்டியிருந்தீர்கள். ஈழ் கவிதை வரிசை உருவாக்குவது பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். அவை முக்கியமெனக் கருதுகிறேன். …

ஒற்றைக்கோடை : அறிமுகக் குறிப்பு

கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அந்த நூல் குறித்தும் ஆதி பார்த்திபன் மற்றும் ஈழத்து இலக்கிய சூழல் பற்றியும் சிறு கட்டுரை அகழ் இணைய இலக்கிய இதழில் வெளிவந்திருக்கிறது.

130: செண்டுவெளியாட்டம் : 02

“மானுடர் அதிகாரத்தின் முன்னரே தலை பணிவர். அதுவும் பொய்யமைவே. எங்கும் எதிலும் பணிய முடியாதவர் என எவருமில்லை. பணிவில் எஞ்சும் ஆணவமே பணிபவரின் மெய்யுரு.அறமும் அதிகாரம் கொண்டதே. அதன் அதிகாரமே முற்றுறுதியாதன வல்லமை கொண்டது. ஆகவே அரசர்கள் அதை அஞ்சுகிறார்கள். காவியர்கள் அதை வணங்கி பிறிதொரு அறத் தெய்வத்தில் அதை நிலை நிறுத்துகிறார்கள். வீரர்கள் அதைக் காக்கும் மானுடக் கவசங்கள் மட்டுமே” என உரத்த குரலில் சொல் பிளிறிக் கொண்டிருந்தான் …

தன்னறம் இலக்கிய விருது : 2024

மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு உணர்ச்சிகள் பலவேறாக வகைப்படுத்துகின்றன. ஒன்றில் பொருந்துவது பிறிதில் பிழைப்பது. அறங்களை ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் மறு விசாரணை புரிவதை இலக்கியம் தான் விழைந்தோ விழைவின்றியோ …

நீலி : பெருந்தேவி சிறப்பிதழ்

நீலி இதழில் கவிஞரும் எழுத்தாளருமான பெருந்தேவி அவர்கள் பற்றிய சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறார்கள். பெருந்தேவி தமிழின் முக்கியமான கவிஞர் என்பது என் எண்ணம். அவர் குறித்து சிறப்பிதழ் வெளியாகுவது முக்கியமான பண்பாட்டுச் செயற்பாடு. வாழ்த்துகள் நீலி இதழுக்கு. https://neeli.co.in/category/%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2024/

நிகழ்வு நிறுத்தம்

அனாரின் ஐம்பதாவது அகவையை முன்னிட்டு குமாரதேவன் வாசகர் வட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட இருந்த தமிழ் நிலத்துப் பாடினி எனும் நிகழ்வு நிறுத்தப்படுகிறது. நிகழ்வினை முன்னெடுப்பதில் ஏற்படும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு அறிவிக்கப்படுகிறது. சுபம்.

நோவிலும் வாழ்வு : அறிமுகம்

கவிஞர் வசிகரனின் முதற் கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இவ்வாரம் நிகழவிருக்கிறது. ஆக்காட்டி பதிப்பக வெளியீடாக தொகுப்பு வெளிவந்திருக்கிறது. நிகழ்வை கவிஞர் கருணாகரன் தலைமை கொள்கிறார். நிகழ்வில் எழுத்தாளர் சு. குணேஸ்வரன், கவிஞர் வட்டக்கச்சி வினோத் ஆகியோர் உரையாற்றுகின்றனர். * கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் …

129: செண்டுவெளியாட்டம்

விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது போல இருவரும் சீறிக்கொண்டு வந்தனர். நிரதையும் திருதையும் அவர்களின் சொற்களின் பொருளின்மைகளைச் சுட்டி பெருங்குரலில் சிரித்து அவர்கள் முதுகுகளை யானைத் தோல்களென அறைந்தார்கள். கொற்றனின் இளந்தோல் கன்றி மெல்ல வீங்குமளவு நிரதை அவனை அறைந்து …