52: திசையிலான்: 03
அனல் முகத்தோன் வீற்றிருந்த ககனத்தின் கீழ் நத்தையலைகள் அடித்த சிறுகடலிலிருந்து கொற்றனின் இருகால் பிடித்துக் களிமணலால் இழுத்துச் சென்றார் கம்பளி வைரவச் சித்தர். அவன் மூர்ச்சையடைந்து தேகம் சுவாசத்தின் கலமென மட்டுமே எஞ்ச அவரிழுப்புக்குப் பின் சென்றான். பேருருவரான கம்பளிச் சித்தர் சிறு காளையொன்றை எரியூட்ட இழுத்துச் செல்கிறார் என நோக்கிய வண்டிலோட்டிகளும் குடிகளும் கடலில் மலரள்ளிப் பெய்தபடி ஈசனே ஈசனே என நாவுச்சரிக்க வணங்கிச் சென்றனர். தொலைவில் ஒலிக்கூட்டடென …
