14: இருதி எழல்
ஆழி நிறைவது உப்பின் கண்ணீர் என நினைத்துக் கொண்டாள் இருதியாள். பனைகளின் பாளைகளில் கீறிய பசும் வெட்டிலிருந்து கள் கலயங்கள் நிறைவது மண்ணின் கண்ணீர் என விழிகளை உயர்த்தினாள். அலைகடலின் வெண்மணலில் வெய்யில் குழந்தை வடிவில் துயில்ந்து புரள்கிறது எனக் கால்விரல்களை அழுத்திக் கொண்டாள். விடியலின் முதற் கலனாகத் திரும்பியது துமிலரின் நீல வர்ண நெடுங்கலன் உப்பினி. கலம் நிறைய மீன்களும் சிங்க இறால்களும் குவிக்கப்பட்டிருந்தது. வலையினை எடுத்தபடி துமிலர் …
