62: புரவி அரசன் : 02
உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் தொடங்கியது. “விண்புரவி அரசரே. இன்றுடன் உங்கள் ஆதிக்கம் முடிவடைய வேண்டும். புரவி நெறியெனச் சொல்லப்படுபவை மந்திரச் சுனையில் கலந்த நஞ்சு எனக் கண்டேன். பாதாளப் புரவிகள் தாம் விழையும் போது எங்கும் செல்லும் உரிமை …
