தும்பி: மீளப் பறத்தல்
தும்பி சிறார் மாத இதழ் புதிய துவக்கம் பனிமலைகள் சூழ்ந்த லடாக் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழ்ந்த அச்சிறுவனுக்குப் பதினோரு வயது. அந்தக் கிராமத்தில் நூலகம் இல்லை, புத்தகக்கடை இல்லை, நன்றாகக் கட்டப்பட்ட ஒரு பள்ளிக்கூடம்கூட இல்லை. ஆனாலும் அச்சிறுவனின் மனதில் ஒரு கனவு மட்டும் நெடுநாளாகத் துடித்துக்கொண்டே இருந்தது. ‘தனது கிராமத்தில்… தனது வீட்டில் வைத்து ஒரு கதைப்புத்தகம் வாசிக்க வேண்டும்’ என்பதே அக்கனவு. ஓர்நாள் அக்கிராமத்திற்கு ஒரு பயணி …
