வண்ணச்சீறடி – தர்மு பிரசாத்

“ஈழத்துப் புனைவிலக்கியத்தின் அடிப்படையான போதாமையென்பது, அதற்கு திரண்ட வரலாற்று நோக்கோ, அதிலிருந்து பிறந்து வரும் தரிசனமோ இல்லை என்பது தான். நம் மொத்த புனைவுலகும் வரலாற்றின் அடுக்குகளை புனைவில் அடுக்கி ஒன்றிலிருந்து இன்னொன்றினூடாக வடிகட்டி அதன் செறிவும் தூயதுமான வடிவத்தை அடைய இதுவரை முடிந்திருக்கவில்லை, அல்லது முயற்சி கூட செய்திருக்கவில்லை. தர்மு பிரசாத்தின் முதற் குறுநாவலான சிறகையில் இந்த அடுக்குகளின் இடையே கல்லிடுக்கில் நீரென வரலாறும் தரிசனமும் வழிந்து செல்லத் …

முதலில் உதித்த செஞ்சூரியன்

  இம்மாதம் 20 ஆம் திகதி ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கே. டானியலின் நூற்றாண்டு நினைவும் அவரது நாவல்களினது செம்பதிப்புகளின் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் உள்ள றிம்மர் மண்டபத்தில் மாலை 3 மணி தொடக்கம் 6 மணி வரை நிகழ இருக்கின்றது. வாசகர்களும் எழுத்தாளர்களும் நம் முன்னோடிகளை நினைவு கொள்ளவும் மீள வாசிக்கவும் உரையாடவும் விவாதிக்கவும் இத்தகைய தொடர் நிகழ்வுகள் அவசியமானவை. ஆர்வமுள்ளோர் வருக. கே. டானியல் படைப்புகள்

மீமாம்ஸகர்கள்

ஜெயமோகன் தளத்தில் பாலையில் முளைத்தல் என வெளியான குறிப்பில் இலங்கைத் தீவின் மேல் எங்கள் முகங்கள் இருப்பது போன்ற படத்தைப் போட்டிருந்தார். தமிழ் கூறும் நல்லுலகை ஆண்டு வருபவர், மும்முடிச் சோழமண்டலத்தின் பேரரசர் ஜெயமோகன் தான் என்பது ஒரு ஈழத்து நாட்டுப்புறக் கதை. ஆகவே அவர் எங்கள் முகங்களை போட்டதை கேலி செய்யும் மீம்ஸ்களைப் பார்த்தேன். தர்மு பிரசாத்தும் தன் பங்கிற்கு எளிய மீமாஸ்ஸகர்களுடன் இணைகிறார்.   தோழர்களே, இலக்கிய …

ஆசிரியரின் சொற்கள்

ஆசிரியர் ஜெயமோகன் ஈழத்தில் புதிய அலைக்கான சாத்தியமும் விசையும் என்னிடமும் யதார்த்தனிடமும் இருப்பதாக ஒரு அவதானிப்பை சொல்லியிருக்கிறார். “பாலையில் முளைத்தல்“. ஒரு நற்சொல் என்பது எப்பொழுதும் பொறுப்பும் கூட. அவரிடமிருப்பது ஓர் எதிர்பார்ப்பு. அது நிகழக் கூடும், நிகழாமல் போகவும் கூடும். இலக்கிய விவாதங்களில் அடிப்படைகளையும் வாசிப்பதற்கான வழிகளையும் ஓரளவு விரிவாக எழுதிய பின்னர் இந்த எதிர்வினைகளின் காலத்தைக் கடந்து சென்று விடுவேன். எங்கள் சூழலில் வாசிப்பு அறவே இல்லையெனச் …

இடிப்பாரை இல்லா எமரா மன்னன் – தர்மு பிரசாத்

“..மு.தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளார்ச்சி’ கட்டுரைகள் படிக்கும் போது நடந்த விவாதம் நினைவில் வருகிறது. ஒரு கதைக்குப் பல பக்கங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறார். அதிலிருந்து ஒன்று ஊகிக்க முடிந்தது. அந்தக் கதைக்கு அந்தக் காலத்தில் பெரும் விவாதம் நடந்திருக்க வேண்டும். பல இலக்கியர்களும் மாறி மாறி தொடர்ந்தும் விமர்சித்தார்கள். விவாதித்திருக்கிறார்கள். ஆனால் இன்று மு.தளையசிங்கத்தின் விமர்சனம் மட்டும் தான் அப்படி ஒரு கதை ஈழத்தில் வெளியாகியது விவாதம் நடந்திருக்கிறது என்பதற்குச் …

வாற்பேத்தை வாழ்க்கை – யதார்த்தன்

“சில மாதங்களுக்கு முன்பு இதே அரசின் சுங்கத்துறை ஈழத்தின் சில இலக்கிய நூல்களைத் தடுத்து வைத்தது. அதற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள் இணைந்து  யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் கண்டனப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இன்றைக்கு விருதிற்கு  முன்னால் அண்ணாந்து இருப்பவர்கள், இதற்கு முன்னால் அவற்றை வாங்கி வீட்டில் ஷோக் கேசை அலங்கரித்தவர்கள், கண்ணாடியில் குஞ்சி மயிரைத் திருத்தி விட்டி பெருமைப்பட்டுக் கொண்ட ஒரு எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை. ஒரு சொல் கூடப் பேசவில்லை. …

களத்திற்கு வருக!

எழுத்தாளர் கருணாகரன் புதியதாக இணையத்தளம் உருவாக்கியிருக்கிறார். அதில் அவர் தொடர்ந்து எழுதுவது பல வகையில் முக்கியமானது. முதன்மையாக முகநூல் சில்லறை விவாதங்களுக்கு வெளியே இணையத்தளங்களில் விவாதிப்பது இலக்கியத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொள்ளும் வாசகர்களை உருவாக்கும். என் தளம் ஆரம்பித்து மூன்று வருடங்களில் அதை நன்றாகவே உணர முடிகிறது. முகநூல் ஒரு அரட்டை வெளி. அங்கு தீவிர இலக்கியத்தை விவாதிப்பது போன்ற நேரவிரயம் பிறிதில்லை. தேநீர்க் கடைச் சாக்குப் போல …

யாழ். சர்வதேச புத்தகத் திருவிழா : 2026

நல்லூர்த் திருவிழாவினை ஒட்டி நிகழும் யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா செப்டெம்பர் 5 – 9 வரை நல்லூரின் அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ளோர் பயன் பெறுக. 

மொழிநடை, செல்வாக்கு – ஜெயமோகன்

‘பித்தம் தெளிய வைத்தல்’ எனும் என் எதிர்வினையில் மொழிநடையில் மூத்த தலைமுறையினரின் செல்வாக்கு பற்றிய என் பார்வைகளை தொகுத்து எழுதியிருந்தேன்.  மொழிநடை மீதான செல்வாக்கு குறித்து ஜெயமோகன் தன் தளத்தில் விரிவாக எழுதியிருக்கும் குறிப்புகளின் இணைப்புகளை கீழே கொடுத்திருக்கிறேன். “….இது மிகச் சிக்கலான, மிக மிக நுணுக்கமான ஒரு செயல்பாடு. பல்லாயிரம் கிலோ எடையைத் தூக்குவது போலவோ, மெல்லிய பனித்துளி ஒன்றை சுட்டுவிரல் நகத்தின் மேல் எடுத்துக்கொண்டு வருவது போலவோ, …

ஒரு தெய்வத்தை எழுப்புதல் : முன்னுரை

நான் ஒரு கவிஞன் என்ற ஆணவம் அளிக்கும் நிமிர்விலும் செளகரியத்திலும் நெடுங்காலம் ஆழ்ந்திருந்தேன். என் முதலாவது கவிதைத் தொகுப்பான ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ வெளிவந்த பின்னர் அது மெல்ல மெல்ல மாறியது. தொகுத்து அளிக்கப்படும் பொழுது சுருங்கிக் கட்டியாகி சிறிய கூழாங்கல் போலாகியது. கவிதையின் உச்ச கணங்கள் அளிக்கும் நிறைவுணர்வு சட்டென்று அகன்று விடுவது. மிச்ச நேரமென்பது மூளையின் நெசவுத்தறிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாய கொந்தளிப்புடன் இருப்பது என்பதாகி விட்டது. கவிதையைப் …