120: சிலைப் புன்னகை : 02
விருபாசிகையிலிருந்து எழுந்த நறுமணத்தின் தீந்தீற்றலொன்று வளியை நிறைத்து கனவில் பெய்து நாசி நுழைந்தது. வாசனையென்பது மானுடரை ஆழ இழுத்துக் கொள்ளும் விந்தை என எண்ணினான் பொன்னன். அம்மயக்கு வாசனை அவனைக் கேள்விகளின்றி அவளை நோக்கச் செய்தது. நோக்கில் அவள் எளிய அருள் கொண்டிருந்தாள். விழைவும் விலகலும் அற்ற சக இருப்பென நீடித்தாள். காற்றை உந்தி வெளியில் அந்தரத்தில் மிதக்கும் யட்சியொருத்தியென எழுந்தாள். மேனியின் அழகு கூர்ந்து வதனம் என்றாகி நின்றாள். …
