Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

Category: அழிகளம்

50: திசையிலான்

Posted on July 3, 2024

பட்டினத்தின் முகவாயில் கடந்த பெருங்கூட்டமொன்றிற்கிடையில் இரு கருங்காளைகள் பூட்டிய வண்டிலில் சிகை காற்றில் தீவிலகலெனப் பறக்கக் கொற்றன் எழுந்து நின்றான். விசும்பிடை உதித்துக் கதிரினைச் சூடி மண்ணளையும் சிறுகுழவியென அந்தரத்தை ஆட்டிடும் ஆதவன் மைந்தனென அவன் மேனியெழில் தோற்றிற்று. கூட்டத்திலிருந்த இளம் பெண்கள் கலகலத்து…

49: ஆடி மயில்

Posted on July 2, 2024

திருதிகா தோழிகளுடன் மாற்றுடை அணிந்து தன்னைக் குடிகள் அறியாத வண்ணம் உருமாற்றிக் கொண்டாள். மன்றுக்குச் செல்லும் பெருவீதியால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் வண்ண பேதங்களை நோக்கிக் களிச்சிரிப்பாடினர்கள் தோழியர். திருதிகா ஒவ்வொன்றையும் தொட்டு எடுத்து நோக்கினாள். ஒவ்வொரு ஆடியிலும் தன்னை உற்றாள். ஒவ்வொரு…

48: புரவிக் கால்

Posted on July 1, 2024

மகாசேனன் கருநிறப் புரவியின் குளம்படிகள் மண்ணை உந்தி விசை கொண்டு கடற்கரையின் வெண்மணலை உழுது செல்லுவதை நோக்கியபடி கடிவாளத்தைப் பற்றியிருந்தான். இளஞ் சூரியன் கடலிலிருந்து எழுந்து பொன் நாணயமென உயர்ந்து கொண்டிருந்தான். காகங்கள் கரைந்து எழுப்பும் ஒலிகளால் கலங்களும் தெப்பங்களும் அசைபவை போல கரைக்கடலில்…

47: மாகதா : 02

Posted on June 30, 2024

மடாலயத்தில் உணவு சமைக்கும் வாசனை எழுந்து புகையின் இன்மணம் காற்றில் வீசிக் கொண்டிருந்தது. மாகதா இளம் பாணனின் மெல்லுடலை நோக்கியபடியிருந்தார். அவனுள் சுழிக்கும் உடலசைவுகள் நிரந்தரம் என்பது போல் தோன்றியது. இளையவர்களிடம் தோன்றும் மிதப்பிற்கும் கனவுகளுக்கும் அப்பால் துயர் கொண்டிருப்பவன். துயரை அனுபவிப்பவர்களை விடச்…

46: மாகதா

Posted on June 29, 2024

“உங்கள் சொற்கள் எதன் பொருட்டு எழும் பாணரே” என அமைதியில் எழும் நதியலையென ஒலித்த குரலில் கேட்டார் மகாசோதி. நீண்டு தடித்த பேரரச மரத்தில் நலுங்கிக் கொண்ட ஆயிரமாயிரம் இலைகளின் தளும்பல்களின் கீழ் பனையோலையால் இழைக்கப்பட்ட நீள் பாயில் ஊழ்கத்தில் உடலமைத்து அமர்ந்திருந்தார். அவர்…

45: சிம்ம நிழல்

Posted on June 28, 2024

நெடிய மூங்கில் கழிகளால் தூணிடப்பட்டு பழுத்த பனையோலைகளால் சீராகக் கூரையிடப்பட்ட சத்திரமொன்றில் இளவெயில் தன் ஒளிக்கரங்களை நீட்டியிருந்தது. இடையிலிருந்த சாளரங்களால் சிறு ஒளித்தூண்கள் சத்திரத்தின் உள்ளே விழுந்து கொண்டிருந்தன. வீதியில் பெருகிய குடிகளின் காலடிகளால் விம்மியெழுந்த புழுதியின் தூசுகள் அவ்வொளித் தூண்களில் பரவி ஒளித்தூசென…

44: ஓயா மழை : 02

Posted on June 27, 2024

“மழைப் பொழிவு இருட்டில் வைரத் துளிகளென எங்கள் மீது கொட்டிக் கொண்டிருந்தது. மேனி மயங்கிக் கிடந்த என்னைத் தன்னிரு கரங்களில் இளங் கன்றை ஏந்துவது போல் தூக்கிக் கொண்டார். கருவறையின் முன்முக மண்டபத்தில் சில அகல்கள் தழலாடின. எனது விழிகள் பாதி சரிந்து தூங்கின….

43: ஓயா மழை

Posted on June 26, 2024

காலை பரபரவென விடிந்து கொண்டிருப்பதை அங்கினி நோக்கியபடி உவகையில் முகம் விரிய நின்றாள். விழவுக் காலங்களில் உளம் கசப்பை அடைய முயலும் போதெல்லாம் தேன்வழுகும் பாறையில் நிற்கும் தேரையெனத் தன்னை உணர்வாள். வழுக்கிச் சென்று காமத்தின் வாயில் விழுந்து கொள்வாள். உடலை விழைவின் கலமென…

42: இருட் குழவிகள் : 02

Posted on June 25, 2024

“மானுடர் தம் சொந்த நிழல்களைச் சந்தேகிப்பவர்கள் கூத்தரே. இளமையில் நாம் எண்ணும் கனவுகள் மெய்போலத் தோன்றுபவை. அணுகும் தோறும் காதல் கொண்ட பெண் காதலைப் பூரணம் என எண்ணுவதைப் போல் தோற்றமளிப்பவை. அவை நீடிக்கும் காலத்தில் அப்பூரணத்தின் விளிம்புகள் கரைவதை நம் அகம் நோக்க…

41: இருட் குழவிகள்

Posted on June 24, 2024

பேரொளியே நீ இருட்டின் குழவிமேதமையே நீ பித்தின் குழவிஅழிகலன்களே நீங்கள் மானுடரின் குழவிகள்அழியாத இருட்டே நீ வாழ்கஉன்னை வணங்குகிறோம்எங்களை விட்டு அகலாதிருகருமையே நீயே பேரழகுஇருள் கிரணங்களே நீங்களே எங் கரங்கள்இருளே விழியாகுக இருளே வழியாகுகஇருளே துணையாகுகஇருட்டின் மர்மங்களே எங்களைக் காக்குகஇருள் நாவுகளே எங்களின் புலனாகுகஇருள்…

Posts pagination

Previous 1 … 8 9 10 … 13 Next
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,171)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (2,009)
  • காதலின் முன் பருவம் (2,000)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,910)
  • விடுதலையில் கவிதை (1,891)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme