80: விழவின் தெய்வம்
“எண்ணுவதே இறையென்றாகுவது. இறையின்றி இருத்தலும் எண்ணமே” என்றார் வேறுகாடார். இளம் பாணன் நாகதேவி ஆலயத்தின் மாபெரும் சிற்பங்களையும் நாகமென்ற ஒற்றை உயிரியின் எண்ணற்ற மடிப்புகளையும் புடைப்புகளையும் உக்கிரங்களையும் சாந்தங்களையும் வேட்கைகளையும் நெளிதல்களையும் அமைதல்களையும் அங்கற்று இருப்பதென்ற மயக்குகளையும் நோக்கிக் கொண்டிருந்தான். “இளம் பாணனே. இங்கிருப்பவை பல்லாயிரமாண்டுகளாக மானுடர் கண்ட நாகங்களின் விழிமணிகள் என்றறிக. ஒவ்வொரு முறை ஒருநாகம் கல்லாலயத்தில் அமைக்கப்படும் தோறும் எங்கோ எவரோ கண்களால் கண்டுற்ற அதன் வெளிச்சம் …
