என்ர மயில்க் குஞ்சே!

கம்பஹாவுக்கும் கொழும்புக்கும் இடையில் உள்ள விளிம்பிலிருக்கும் வெலிசர வைத்தியசாலையில் தம்பிக்கு ஒரு சத்திரசிகிச்சைக்காக நிக்கேக்க தான் ‘விடுதலையில் கவிதை’ தொகுப்பின் கடைசிக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தன். நல்ல விதானமான ஆஸ்பத்திரி. எங்கும் சிங்கள நோயாளர்களும் தாதிகளுமே அதிகம். தமிழ் அரிது. கட்டுரையை எழுதச் சரியான இடம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறை தொடர்பிலான விமர்சனங்களைத் தொகுத்து எழுதிக் கொண்டிருந்தன். ஒரு நாளில் பத்து மணித்தியாலத்துக்கு மேல போனைச் சார்ஜ் போட்டுப் …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 03

பிரியத்துக்குரிய கிரிக்கு, அகச் சிக்கலை வழமைக்கு மாறாக, வாசிக்க நினைக்கும் வாசகருக்கு கொஞ்சம் விளங்கும் படியும் எழுதியிருப்பது குறித்து – இது உரையாடலுக்கான களங்களை அமைத்து தருமென்பதில் நம்பிக்கை கொள்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை ஒரு பொதுவெளியில் தனியே வாசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. வாசித்தவுடன் அதனை நான் புரிந்துகொண்ட விதம் உடனடியாக எனக்கு எந்த உணர்ச்சியையும் தரவில்லை. ஆனால் தொடர்ச்சியான அந்த ஆண் குரலின் சொற்கள் சமகாலத்தின் எல்லா நாவுக்குமான என் …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 02

வணக்கம், உங்களுடைய பிரியத்துக்குரிய பெண்ணுக்கு என்ற புனைவில் இருந்து சில கேள்விகள் எனக்கு, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் இருக்க முடியும் என்ற விடயத்தை பலரும் விவாதித்து வருகின்ற வேளையில் அதை அடிப்படையாக வைத்து பல பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும் ஒடுக்குமுறைகளை எதிர்நோக்குவதும் வெவ்வேறு தளங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஆனால் சம்மந்தப்பட்ட எவரும் அவற்றை பொதுவெளியில் விவாதிக்கவோ பொறுப்புக்கூறவோ தயாராக இல்லை இது வெறும் கதைகளாகவும் கொசிப்பாகவுமே வெளிவருகின்றன …

பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம்

ஒரு போராட்டம் செய்யப்பட்டு இருக்கிறது இதற்குள்ளே. ஒரு யதார்த்தம் இருக்கிறது. அதேநேரம் புரட்சி இருக்கிறது. என் ஆண்மையின் அத்தனை விறைப்புத் தனங்களுக்குள்ளும் உள்ளே மரத்துபோன உணர்சி மிக்க பரம ரகசியமாக நீள நினைக்கும் காமத் தீயின் கட்டுக்கடங்காத ஆர்வத்தில் வரும் கோளாறுகளை எழுதும் அந்தத் துணிவு அதிர்கிறது. ஆரம்பத்தில் தூண்டி பின்னர் எல்லை தாண்டி இறுதியில் வாசகனை மனச்சிறையில் அடைக்கிறாய். என்னை போன்ற ஒரு ஆணுக்கு கிடைத்த ஒரு தண்டனை …

பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும்

இன்று மாலை ‘பிரியத்துக்குரிய பெண்ணுக்கு’ என்ற புனைவுப் பிரதியொன்றை வெளியிட்டிருந்தேன். அதையொட்டிப் பல நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன பிரச்சினை உனக்கு?. இது ஒரு மோசமான பிரதி, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்கிறாய் என்று ஏசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இரண்டு விடயங்களை அடிப்படையாக உரையாட வேண்டியிருக்கிறது. ஒன்று, ஒரு புனைவை எழுதுபவரின் சொந்த வாழ்க்கையில் நிகழும் ஒன்றைத் தான் பிரதியில் எழுதுகிறார்கள் என்று நினைப்பவர்கள். இது வாசிப்பு …

வாசகர்கள் எனும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள்

எந்தவொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு அறிவுத் துறையையும் ஆழப்படுத்தவும் விரிவான சமூக அறிதலையும் ஏற்படுத்துவது அத் துறைசார் வாசகர்களே. அவர்களே கேள்விகளின் மூலம் சந்தேகங்களையும் விடுபடல்களையும் நீக்குபவர்கள். அப்பங்களிப்பின் வழி அவர்கள் சமூகத்தின் அன்றாட சராசரித்தனத்திலிருந்து விலகி தனித்து ஒலிக்கிறார்கள். அவர்களே பெருந்திரளுக்கும் அறிவியக்கத்துக்குமிடையிலான நீள் பாலங்கள். பொதுவான உரையாடல்களைக் கவனிக்கும் போது உடனே புலப்படுவது ஒன்று தான், எந்த ஒரு துறை சார்ந்து விமர்சிக்கின்றோமோ அது தொடர்பில் குறைந்த பட்ச …

குத்திக் கிளறலும் அரிதாரத்தை அசிட் ஊற்றிக் கழுவுதலும்

கருத்துச் சுதந்திரம் என்பது செயற் சுதந்திரமல்ல என்ற அடிப்படையிலிருந்தே எனது பார்வை உருவாகியிருக்கிறது. கருத்துகள் முன்னேற்றமடைவதற்கு, முரணியக்கங்கள் தமக்குள் தொடர்ந்து உரையாடி, ஒரு சமரசத்தை எட்டி, மேலும் தொடர்ந்து விவாதித்து, விரிவாகிக் கொண்டு செல்லக்கூடிய மாபெரும் உரையாடற் பரப்பாக ஆக வேண்டும், அதில் ஒரு சிறு துளியே நாம் ஒவ்வொருவரும் ஆற்றும் கருத்தியல் பங்களிப்பு. ஒவ்வொரு தரப்பிற்கும் அவற்றுக்கான வரலாற்றுப் பின்னணிகள், அதன் வழி உருவான பார்வைகள், நலன்கள் எல்லாமே …

காற்சட்டைக் கலாசாரம்

அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் காற்சட்டையுடன் நுழைந்தவர்களை வாயில் காப்பாளர்கள் மறித்து உட்செல்லவிடாமல் தடுத்தமை சமூக வலைத்தளங்களிலும் வெகுசன வெளியிலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவான உரையாடல்களில் உட்செல்ல முயன்ற தரப்பினரை மலினமாகச் சித்தரித்து தரக்குறைவாக ஏசி பல்வேறு கருத்துகள் பரிமாறப்படுகின்றன. இந்தப் பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் யாழ்ப்பாண மனநிலை ஆடை தொடர்பான வரையறைகளில் கடந்த காலத்தில் எவ்விதம் நடந்து கொண்டது, அதன் பொதுப்புத்தி எப்படியானது என்பதை விளங்கிக் கொள்வோம். சம்பவம் …

வெடிமணியமும் இடியன் துவக்கும்

மதிசுதாவின் வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறு படம் பார்த்தேன். தொடக்கத்திலே மதிசுதா ஒரு முழு நீளப்படத்திற்கு எழுதப்பட்ட திட்டமிடப்பட்ட, கதையைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் சிறுபடமாக எடுத்து முடித்ததாகப் போட்டிருந்தார். ‘நல்லபடம்’ எடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஈழ சினிமா கொடுக்க கூடிய முதல் நெருக்கடி, பணம். எனக்கு அதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. அச்சூழலை மாற்ற வேண்டும் என்பதிலும் பெருத்த உடன்பாடு உள்ளது. ஆனால் இது படத்திலே எழுதப்பட்ட ப்ரேமாக …

நீருக்கடியில் ஓடிக்கொண்டிருக்கிறது திமிங்கலம்

கவிஞர்கள் ஒரு கால கட்டத்தின் குறியீடாக மாறக்கூடிய அரிதான நிகழ்வுகள் நடக்கும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு கம்பீரமான குறியீடாக பாரதியார் எப்படி மாறினாரோ, அப்படி ஈழப் போராட்டத்தின் ஏராளாமான சம்பவங்களுக்கான, குறிப்பாக சித்திரவதைகள், இயக்கங்களினுடைய அநீதி, அரசினுடைய அடக்குமுறை, சமூகத்தினுடைய புறக்கணிப்பு போன்ற எல்லாவற்றிற்கு ஊடாகவும் தொடர்ந்து பயணித்து எப்படி ஒருவன் கவிஞனாக ஆகிறான், தொடர்ந்தும் அந்த நம்பிக்கையோடு போராடுகிறான். அதனூடாக தனது வாழ்க்கையை எப்படி ஒரு குறியீடாக …