சாம்பலாய் அடங்கும் தாகம்
மொழியுள் நுழையும் உரிமைகளினதும் நீதிகளினதும் குரல்கள் சிலவேளைகளில் நேரடித்தன்மையான மொழியாகத் தம்மை பாவனை செய்வது உண்டு. அது தனது இயல்பின் சொற்பிசகாத் தோற்றமெனத் தன்னை முன்வைப்பதுமுண்டு. இவை தோற்ற வெளிப்பாடுகள். பலநூறு வகைகளில் சொல்லப்பட்டு அழகியலாக்கம், நுண்மையாக்கம், உருவகமாக்கம் நிகழ்வதன் மூலமே ஒரு கவிதை மொழியுள் வாழும் மனங்களில் தம்மை நினைவுறுத்திக் கொள்கின்றது. இந்தத் தன்மைகளை அடைவது ஒரு மொழிச்சூழல் கூட்டாக நடந்து செல்லும் நெடும்பயணம். பண்பாட்டில் இதுவொரு தினசரிச் …
