எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்
மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் மனநிலம். ச. துரையின் கவிதைகள் கடலின் மனிதர்களை வாழ்வாக்கி அளிப்பவை. அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அலையடிக்கும் பெருங்கடலின் வற்றாத சிறகடிப்பை எழுதுபவை. துரையின் கவிதைகள் கடலிடம் எப்பொழுதும் முடிவுறாமல் கரையை நாநீட்டித் தொடும் வேட்கையைப் …
