வேலன் வெறியாட்டு

அப்பாவுக்குச் சாமி நம்பிக்கை அளவுக்கு அதிகம். சாமிகளே அஞ்சி ஒளியுமளவுக்குப் புதிய புதிய சாமிகளைத் தேடி ஓடியபடியே இருப்பார். பிரிந்தாவைக் காதலித்ததை அறிந்த பின் இரண்டு விநோதமான சாமியாடிகளிடம் அழைத்துச் சென்றார். ஒன்று வவுனியாவில் உள்ள ஒரு இளம் பெண் சாமியார். பலவகையான வித்தைகளைக் காட்டி பக்தர்களை ஈர்க்கும் கெட்டிக்காரியாக இருந்தார். பால கிருஷ்ணன், வைரவர், அம்மன் என்று ஒவ்வொரு தெய்வமாகவும் மாறி அதற்கேற்றபடி குரலை மாற்றி உடல் பாவங்களை …

சிறு கோட்டு

பொன்னை இன்னொரு பொன் தாழிக்குள் வைத்துப் பாதுகாப்பதைப் போல் ஒரு கவிதையை இன்னொரு கவிதைக்குள் வைத்து விடலாம். அது பழந்தங்கத்தின் நுண்மையான இழைகளைப் புது வார்ப்பினுள் சேகரிப்பதென ஆகும். சங்கக் கவிதைகளை அப்படி எடுத்துச் சொல்லும் வாசிப்பு முறையையே நான் கைக்கொள்ள விரும்புகிறேன். காதலின் எல்லா விதானங்களிலும் சிறகடித்து வளைய வளைய அமரும் பலவகைப் பட்சிகள் போன்றவை குறுந்தொகையின் கவிதைகள். காமத்தின் உன்னதமாக்கலே காதலின் விசையூற்று. சங்கக் கவிதைகள் காமத்தை …

மார்பிடைப் பெருங்குளம்

மட்டக்களப்பில் உள்ள கற்பாறைக் குன்றொன்றின் அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. சுற்றிலும் உயர்ந்து நீண்ட மரங்கள். எழுத்தாளர் இமையம் அந்த நீரகத்தைப் பார்த்தபடி நின்றுவிட்டுத் திரும்பி அவரின் இயல்பான புருவத் துள்ளலுடன் சொன்னார், “சங்கக் கவிஞன் சொல்லுறான், பெண் அழுத கண்ணீர் மார்பிடையில் கொக்குகள் மேயும் குளமென்று ஆகியதென்று, அவனுங் கவிஞன், நீயுங் கவிஞனா? அவன் எப்பிடி யோசிச்சிருக்கிறான். இன்னிக்குள்ள எவனாவது அப்பிடி எழுதுவானா?” ஒரு கணம் அக்கேள்வியை எதிர்கொள்ள …

விசும்பு ஆடு அன்னம்

சிறுவயதிலிருந்தே தேர் என்பது இருப்பதில் ஆகப்பெரிய அசையும் மரச்சிற்மென மனதில் ஆகியிருக்கிறது. குரும்பைகளை வைத்து ஈர்க்கில் கோர்த்து ஆக்கும் குரும்பட்டித் தேர் முதல் ஆயிரமாயிரங் கரங்கள் தொட்டு வடக்கயிறால் இழுக்கும் பெருந்தேர் வரை எல்லாமே காதணி பூண்டு சிற்பச் சிறகுகள் அசைத்து மண் ஊரும் பறவையென ஆடி வருவது. சங்க காலத்தில் போக்குவரத்திற்கென வாகனமாகப் பயன்படுத்தப்பட்ட தேர் எப்பறவையெனத் தோற்றங் கொள்ளுமென உலோச்சனாரை வாசிக்கும் வரையில் தெரிந்திருக்கவில்லை. மின்னுச்செய் கருவிய …

ஒளிக்குருத்து

சங்கப் பாடல்களில் உள்ள ஒலியிழைகள் நுண்ணியவை. சொற்கள் சர சரவென நீர்த்தொட்டிக்குள் விழுந்த பாம்பென ஒலியை நோக்கித் தலையெழுந்தபடியே இருப்பவை. அவ்வெழுகை நேரிடையாக எழும் கவிதைகள் உள்ளெழுச்சியில் பாடலெனத் திகழக்கூடியவை. இந்தக் குறிப்பில் உள்ள ஒளவையாரின் இரு கவிதைகள் ஒலியிழையின் தலையெழ மனத்துள் உரத்தெழுபவை. நான் வழமையாகச் செல்லும் வழியில் இருந்த குளத்தடித் தூங்குமூஞ்சி வாகை மரங்கள், சில நாட்கள் இடைவெளியில் முழுதும் மலர்ந்து வேறொரு தெய்வீகமாய் உருமாறி நின்றன. …

கறுமலர்க்காடு

கவிதை என்பது ஒன்றை இன்னொன்றாக்கிக் கொண்டேயிருக்கும் கலை. கருங்கற்பாறைகளாலான கரைகொண்ட குளமொன்றில் செவ்விதழ்கள் உரிந்தும் உரியாமலும் நீண்டு கிடக்கும் தாமரைகள். காற்று உய் உய் என விசிறியடிக்க மழை பலத்துப் பெய்யும் முன்னிரவின் தொடக்கம். ஞாயிறு இருள்மேகங்களின் பின்னிருப்பதால் ஒளியிழக்காத உலகு. எருமைகள் நாப்பிரட்டி குளமிறங்கி தலையை இடமும் வலமும் அசைத்தபடி நகர்கின்றன. குளத்திற்கு அப்பால் கறுத்த மலர்களாலான காட்டின் வரை. அதற்கு அப்பால் மழை சூடிய மலை. பச்சையும் …

அதிகாலையை எழுப்பியது குற்றம்

பழந்தமிழ் இலக்கியங்களை அவற்றின் சொல்லிணைவுகளின் வடிவிற்காக சிறுவயதில் வாசித்திருக்கிறேன். இரண்டு சொற்கள் இணையும் போது உண்டாகும் இழைவு பொன்னணியில் வைரச் சுட்டிகை போற் துலங்கும். இன்னொரு பருவத்தில் அதன் இசைக்காக வாசித்திருக்கிறேன், சொல்லும் போது தோன்றும் தாளம், மனம் குதூகலித்து அடையும் மனக்கால்களின் ஒலியெழ கூச்சலெனத் திரண்டு மெளனமென ஆகும் வரை அச்சொற்களின் இசை கேட்டு ஆடியிருக்கிறேன். பின்னர் அவற்றின் உள்ளுள்ள காட்சியினதும் கதையினதும் இணைவினால் உண்டாகும் வேறொரு வாசிப்பினை …