வேலன் வெறியாட்டு
அப்பாவுக்குச் சாமி நம்பிக்கை அளவுக்கு அதிகம். சாமிகளே அஞ்சி ஒளியுமளவுக்குப் புதிய புதிய சாமிகளைத் தேடி ஓடியபடியே இருப்பார். பிரிந்தாவைக் காதலித்ததை அறிந்த பின் இரண்டு விநோதமான சாமியாடிகளிடம் அழைத்துச் சென்றார். ஒன்று வவுனியாவில் உள்ள ஒரு இளம் பெண் சாமியார். பலவகையான வித்தைகளைக் காட்டி பக்தர்களை ஈர்க்கும் கெட்டிக்காரியாக இருந்தார். பால கிருஷ்ணன், வைரவர், அம்மன் என்று ஒவ்வொரு தெய்வமாகவும் மாறி அதற்கேற்றபடி குரலை மாற்றி உடல் பாவங்களை …
