புற்று நோய் மருத்துவம்
யாழ்ப்பாணம் மார்க்கெட்டில் வைத்து ஒரு வியாபாரி சொன்னார், “தம்பி, மைத்திரி வந்ததுக்குப் பிறகுதான் சுதந்திரமா கதைக்கேலுமா இருக்கு. இயக்கப்பாட்டு எல்லாம் போட முடியுது.” பக்கத்திலிருந்தவர் இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “அத வச்சு சாப்பிட முடியுமே” என்று. எல்லா இடங்களிலும் இப்படியான வார்த்தைகள் வந்து விழுவதைப் பார்க்க முடிகிறது. சாதாரண மக்கள் பெருமளவில் பொருளாதார நிலைமைகளினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்றாடக் கூலிகள், சிறு வணிகர்கள், நடுத்தர வர்க்க குடும்பங்கள் என்று எல்லாத் தரப்பும் …
