127: மழைக்குயில் : 03
மானுடரில் சிலருள் எரியணையாக் கலமொன்று தன்னைத் தானே அமைத்துக் கொண்டு மண் நிகழ்கிறது. வற்றாத தாகத்தின் நாக்குகளால் அம்மானுடரை அவரின் இறுதிக்கணம் வரை குன்றாத தவிப்புக் கொள்ளச் செய்கிறது. எதனாலும் எரிக்கப்படாத எதானாலும் பெருக்கப்படாத எதனாலும் அழிக்கப்படாத அது அதனாலேயே முற்றமைகிறது. அதைத் தாகநாவு என்றனர் நூலோர். நீலன் நின்றிருந்த பெருங்கணத்தில் அக்கலம் வெகுண்டெழுந்து என்னை எரியால் போர்த்துக என அறைகூவியதைக் கேட்டார் சூர்ப்பனகர். அவர் அறிவார் அக்கலம் அங்கனம் …
