21: சங்கு உரைத்தது
ஆங்கிவன் அளித்த அடு தமிழ்ச் சங்கே ஓங்கி நீயுரைஆழி வயிறு புக்குவேன் செருச்சேறு பூசுவேன்தூமிகு வெண்சங்கே நீயுரைஏதற்ற பெம்மான் எந்தை குலப் புலிஏற்றிய நுண்சங்கே நீயுரைகூடிய விறலியர் பாணரும் பொருநரும் கூறிய கூர்வாள் தடங்கை சேர்த்தவன்காணிய கனவைக் கண்டதும் உற்றவன்கேளிர் என நின்று களஞ் சேர் விண்சங்கே. பாணன் ஏழிசைக் கூத்தன் புலரியின் முதற் புள் பாடத்தொடங்கிய வேளை வனத்தின் எல்லையில் கூடியிருந்த புலிப்படை வீரர்கள் கரிகொண்டு பல்துலக்கி ஆற்றில் …
