நுதம்பும் சேறிடை மனக்கேணியில்
1980களின் பின்னர் உருவாகி வந்த பெண்ணிய அலை தமிழ் மொழியின் ஆணதிக்க அடுக்குகளை மெல்ல மெல்லக் கரைத்தபடியிருக்கிறது. அரசியல் நுண்ணுணர்வு மிக்க மொழியைப் பெண்கள் உருவாக்கியபடியே வருகிறார்கள். 1990 களின் காலகட்டத்தில் ஒளவை, சிவரமணி, ஊர்வசி, செல்வி, ஆழியாள் போன்றோர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துள் பெண்களின் பாத்திரம் உருக்குலைந்து போக, அதிலிருந்து மாற்றான நோக்குகளைக் கொண்ட உளவமைப்புகளையும் பிரச்சினைகளையும் எழுத்தில் முன் கொணர்ந்தனர். அவை பெரும்போக்கில் எழுந்த தேசிய …
