99: எதிராட்டக்காரி
சுவடிகை லீலியாவைச் சென்று எழுப்ப விழைந்தாள். சத்தகன் முன்முகப்பிலிருந்து ஆழிக்கரையை நோக்கிச் சொல்லற்று நின்றிருந்தான். கோட்டையின் காவல் நிலைகளில் நின்றிருந்த புலிவீரர்கள் தீப்பந்தங்களினை நூர்த்தபடி சூரிய ஒளியில் கவசங்கள் மினுங்க பணிகளை ஒருக்கிக் கொண்டிருந்தனர். காகங்கள் வாயில் மீன்முட்களைக் கொணர்ந்து முன் முகப்பில் வீசுகின்றன என்பதை நோக்கிய சத்தகன் கரைந்து குரலெழுப்பி அவற்றை விரட்டினான். கன்னங் கரிய சிறகுகள் சூரிய ஒளியில் மெழுகென ஒளிவீசின. சாலைகளை உற்று நோக்கினான். வீசப்பட்ட …
