ஒரு வியத்தல்

கவிஞர் இசையின் வலைப்பூவில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவது கவிதை ‘ஒன்று விட்ட சித்தப்பா’. அக்கவிதையின் சொல்லொழுக்கில் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகு கொண்ட மொழி வீழ்கிறது. மனிதர் துவண்டு நம்பிக்கையிழக்கும் பொழுது அளிக்கப்படும் சொற்கள் கொள்ளும் பேரழகைக் கவிதையெனவும் சொல்லலாம். தெய்வீகம் என்பது தருணம் தான். அக்கணத்தில் அந்தச் சித்தப்பாவின் நாவில் எழுந்தது மானுடம் எனும் அகலாப் பெருநெருப்பின் நீர்மை. …

கவிஞர்களைக் காதலிப்பவன்

எல்லாக் கவிஞர்களையும் காதலிக்கும் வினோதமான நோய் கொண்ட ஒருவனைப் பார்த்தேன். அவன் குரலில் மிதமான கார்வைசோப்பு நுரைக் குமிழிக்குள் காற்றெனஉடையக் காத்திருந்தது அவன் விழிகளில் பூமியை வெல்லும் ஒரு வானவில்லின்ஏழுவண்ணங்கள் இழுபட்டிருந்தன அவன் இதயத்தில் ஒவ்வொரு கவிஞரும் ஒரு இருக்கையை எடுத்துப் போட்டுக் கொண்டுசிலர் கால் மேல் கால் போட்டபடியும்சிலர் யோக அமர்விலும்சிலர் குடித்து விட்டு மேசைகளின் மேலிருந்து ஒரு கரம் உயர்த்தியபடியும்சிலர் கஞ்சா புகைத்த செவ்விழிகள்இரத்தினக் கற்களென மினுங்கும் …

காதற் கடிதம் வாசிப்பவன்

கவிஞர் சபரிநாதனின் குமரகுருபன் ஏற்புரை தனித்துவமானது என எண்ணுவதுண்டு. தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லும் சிறுவனைப் போலவும் யாருக்கென எழுதினாரோ அவருக்கே வாசித்துக் காட்டும் காதல் கடிதத்தின் இசையுடனும் இவ்வுரையை ஆற்றியிருப்பார். இப்பொழுது கேட்டாலும் அதே இனிமை.

மகத்தான ரத்தத்துளி

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை மற்றும் இயற்கையை வியத்தல் ஆகியன பகுத்தறிவின் தர்க்கத்திற்கு அப்பாலான வாழ்வை நோக்கும் வழியென முன்வைத்தன. கைத்தொழிற் புரட்சியின் பின்னரான காலகட்டத்தில் பிரமாண்டமான தொழிற்சாலைகளும் கட்டடங்களும் நகரங்களின் உருமாற்றமும் வேகமாக நிலக்காட்சியை மாற்றியமைக்கத் தொடங்கின. இயற்கையை …

நகைச்சுவைக்கு இலக்கியத்தில் இடமுண்டா?

இலக்கியமே ஒரு நகைச்சுவை தான் என நம்புவது சமூக சராசரிகள் மட்டுமல்ல. ஈழத்தின் பல எழுத்தாளர்களும் தீவிரமாக நம்புவது அப்படித் தான் என எனக்கு எண்ணமுண்டு. ஆனால் இவர்கள் எண்ணுவது போல அல்லாமல் இலக்கியத்தில் நகைச்சுவை உண்டு. அது ஒரு அம்சம். ஆளுமையின் ஒரு பகுதி. ஒரு திறப்பு. ஒரு கிரியேட்டிவ் தருணம். வீட்டின் ஒரு பக்கம் என்பதைப் போல. தமிழ்நாட்டு இலக்கியவாதிகளில் மூத்த எழுத்தாளர்கள் முதல் இளையவர்கள் வரை …

ஒரு பஞ்சுத் துக்கம்

கவிஞர் வே நி சூர்யாவின் எழுத்துகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கரப்பானியம் தொகுப்பின் காலத்து மொழிதலில் இருந்த அந்நியத் தொடுகையென்ற உணர்வு மெலிந்து உருகி அந்தியில் திகழ்வது தொகுப்பின் காலத்தில் பிறிதொன்றாக ஆகியிருப்பதை உணர முடிகிறது. அவரது உலகின் கவனங்கள் அமிழ்பவை அல்லது அமிழப்போகிறவை குறித்து நிகழ்கையில் கூர்மையான நூலினால் தைக்கப்படும் துணித் தையல் வேலைப்பாடுகள் போல அவரது கவியுலகு தோற்றமளிக்கிறது. சொல்லின் சுடர் ஓங்கி ஓங்கி எரிகையில் அது தொடும் …

சிருஷ்டி கீதம்

சிருஷ்டி கீதம் அப்போது இன்மை இருக்கவில்லைஇருப்பும் இருக்கவில்லைஉலகமோஅதற்கப்பாலான ஆகாசமோ இருக்கவில்லைமறைந்து நின்றது என்ன?எங்கே?எவருடைய பாதுகாப்பில்?அங்கே அடியற்ற ஆழமுடைய நீர்பரப்பிருந்ததோ? அப்போது மரணம் இருக்கவில்லைநித்தியத்துவம் இருக்கவில்லைராத்திரி பகலுக்கான அறிகுறிகளும் இல்லைஒன்றேயான அது மூச்சுவிட்டது காற்றின்றிசொந்த வலிமையினால்.அதைத்தவிர ஏதுமிருக்கவில்லை. ஆதியில் இருட்டு இருட்டால் மறைக்கப்பட்டிருந்ததுவேறுபடுத்தயியலாமையால்யாவும் நீராக இருந்ததுஅதன் உயிர்த்துவம் வெறுமையினால் போர்த்தப்பட்டிருந்ததுஅதிலிருந்து முடிவிலாத தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது. ஆதியில் அதிலிருந்து இச்சை எழுந்ததுமனதின் ஆரம்ப விதை அதுதான்இதயங்களில் தேடுகின்ற கவிஞர்கள்தங்கள் ஞானத்தினால்இன்மையில் …

தமிழ் நிலத்துப் பாடினி

அனார் தமிழ்க்கவிதைகளுக்கு இஸ்லாமியப் பண்பாட்டினது செழுமையான மரபின் ஆழத்தை அளித்தவர்களில் ஒருவர். தொண்ணூறுகளின் முதன்மையான கவிஞர்களில் ஒருவரான அனார் நீண்டதும் நெடியதுமான இலக்கியப் பயணத்தில் குன்றாத கலைத்தன்மையும் செயலூக்கமும் கொண்டு துலங்கி மிளிர்பவர். அனாரின் வருகை தமிழின் நெடு வரலாற்றில் வைத்து நோக்கப்பட வேண்டியது. தொடக்கத்தில் அக்காலப் பெண் கவிஞர்களின் ஆவேசமான குரலே அனாரிடமும் வெளிப்பட்டது. சீற்றமும் ஆவேசமும் இளமையின் குணங்கள். பின்னர் ஒரு இளங்கொடி காற்றில் பற்றி சுவரில் …

கருணையான பைத்தியம்

எல்லோர் மீதும் கருணையிருப்பதாக உரக்கக் கூவிஅந்தப் பைத்தியம் தனக்குத் தானேசட்டையைக் கிழித்துக் கொண்டது ஒரு பைத்தியத்துக்கானசர்வ லட்சணங்களும் பொருந்தி வரஏதாவது ஒன்று குறையும் பொழுதுகருணை அதை நிகர்த்த உதவுகிறது குருதியில் தொய்யும் தன் தொடைத் தசையை வெட்டிக் கொடுத்து இரையாக இருந்த ஒன்றைக் காக்ககொடி படரத் தேரைக் கொடுத்து விட்டுநடந்து செல்லமகனின் கழுத்தைத் தேர்ச்சில்லுக்குப் பலியிட்டாகவலிப்பு நோயில் மடிந்தவனை மடியில் கிடத்திஇங்கு உனக்கொரு இடமிருக்கிறது என்று அழுவதாக நண்பர்களேகடைசி மோதகத்தில் …

களியின் ஆன்மீகம்

ஒரு வானமும் ஒரு மரமும் மிச்சமிருக்கும் வரை மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றாதிருக்க வேண்டுமென ஒலிக்கும் கவிஞனின் குரலே ஆதி பார்த்திபன். ஈழத்துக் கவிதைகளில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் அதன் நுண்மைகள் பற்றிய வரிகளும் கீற்றுகளிடையே நிலவெனத் தோன்றிக் கொண்டேயிருப்பவை. வாழ்வை போரின் ஓவியத்துணியில் வரைந்து பார்த்தவை. போர் உச்ச கட்ட உணர்ச்சிகளின் கொல்லன் துருத்தி போன்றது. ஊதுந்தோறும் பல்லாயிரம் தீப்பொறித் துளிகளெனச் சீறியெழுபவை. தீ பொன்னின் நிறமென ஆவது …