119: சிலைப் புன்னகை
தானென்பவள் பலிகொள்ளும் தெய்வம் என்பது போல சாய்மஞ்சத்தில் அமர்ந்து தீயிலையின் வெண்நரைப் புகைச்சுருள்களை ஊதிக் கொண்டிருந்தாள் விருபாசிகை. உதட்டில் ஈரலிப்பின் தகதகப்பு மினுங்கியது. செவ்வட்டையின் மயக்கு தேகத்தில் மழைநீரென. பொன்னன் முத்தினியின் குழலை இருபுரியாக்கி பின்னிக் கொண்டிருந்தான். அவளது தேகம் அவன் முன் ஊழ்கத்திலென அமைந்திருந்தது. காலை உணவின் பின் தேகம் மீண்டும் முழுமை கொண்டு நிறைவு பெற்றிருப்பதை ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டனர். எவ்வளவு பசித்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உண்ணும் …
