117: நீர்க்கொடி : 02
உளத்தில் கசந்து கொண்டிருந்த நச்சில் ஒருதுளியை எச்சிலென மண்ணில் உமிழ்ந்தான் வாகை சூடன். “பாணரே. காமம் கூடாதவன் பழக வேண்டியது போரே. உடலை ஒருக்கி அதைப் படைக்கலமென மாற்றினால் ஒழிய ஆணால் காமத்தை வெல்ல முடியாது. எய்யப்படாத காமம் கொண்ட ஆணளவுக்கு கீழ்மை கொண்டவன் அக்கணம் மண்ணில் பிறரில்லை. காமம் அழகின் போர். எதுவோ ஓர் அழகு சென்று தொட்டு அடையும் நுண்விளையாட்டு. அழகின்மையில் காமம் அமைய இயலாது. நான் …
