59: காய விழைஞன் : 02
பித்தர் விழிதிறந்து நோக்கிய போது சலனமற்ற நீர்ப்பரப்பில் ஓடும் ஒளிச்சில்லுகளைக் கண்டேன். சினமென அமைந்த உவகை அவரிடம் சுவறியிருந்தது. பெண்கள் கூந்தலில் நறுமணமென எண்ணிக் கொண்டேன். அலைந்து அலைந்து என் அகம் அவரைக் கண்ட பின்னர் அடங்கியிருந்தது. நோயில் காறிய கடைசி எச்சிலென என் வசவுகளையும் துப்பிய பின்னர் சொல்லென என்னில் எதுவும் எஞ்சியிருக்கவில்லை. வடுவென எண்ணிய தேகத்தின் நாற்றம் பழகியிருந்தது. ஆயிரமாயிரம் கொடுமைகள் புரிந்தவனின் விந்தின் அணு நான். …
