அலைகளிற் தோணியென நங்கூரமிட்ட வீடு

நீதிக்கான மொழியைக் கவிதை பலவகைகளில் பயின்று வருகிறது. அறத்தை வகுத்துரைத்தல், அது கவனம் கொள்ள வேண்டிய எல்லைகளை மறுவிரிவு செய்தல், அதனுள் அதுவரை ஒலிக்காத தன்னிலைகளின் குரல்களைப் பாடவைத்தல் என்று அதன் பயில்வுகள் பல. மொழிக்குள் உருவான பெண் தன்னிலைகளின் நீதியும் வாழ்வுமாகிய குரல்களில் கோபத்தின் நுனி நாக்கென மொழி திரண்டவர் மாலதி மைத்ரி. அவரது கவிதைகளில் மீள மீள மொழியின் எல்லைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அன்றாடத்தின் நெருக்கடிகளால் தகிக்கும் …

மெய்த்துயர்

வணக்கம் கிரிசாந், இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா? கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் காண்பது? உங்கள் கவிதைகள் எந்த கோட்பாட்டின் பிரகாரம் அமைந்தது? லலிதகோபன் * வணக்கம் லலிதகோபன், தத்துவம் எனும் அறிவுத் தளத்தில் நானொரு வாசகன் மட்டுமே. தத்துவங்களை முறையாகவோ அல்லது முறைசாரமலோ பயின்றவனல்ல. எனது ஆர்வத்தின்பாற்பட்டு …

பக்கத்துக்கட்டிலின் அன்பு

கவியுலகை ஒரு வைத்தியசாலை எனக்கொண்டால் அதில் ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு துறை நிபுணர்கள். சிலர் இதயத்திற்கானவர்கள், சிலர் மனதிற்கானவர்கள், சிலர் பெண்களுக்கான விசேட நிபுணர்கள்… இப்படி வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இதில் நிபுணத்துவம் உண்டு. ஆனால் அங்கிருக்கும் நோயாளியொருவரின் மனவுலகின் அடுக்குகள் அன்றாட நுண்மைகளால் துயர்களால் வேடிக்கைகளால் நம்பிக்கைகளால் ஆனவை. ஒரு பக்கத்துக் கட்டிலில் இருப்பவரின் துயர் கேட்பதெனவும் பரிவு கொள்பவரினதும் பாவனை கொண்ட கவியுலகு ந. சத்தியபாலனுடையது. மொழியின் …

பனித்திணைப் பாணன்

ஒரு நிலம் மனதிலூன்றியவர்கள் நிலம்கடக்கும் போது பெயர்ந்த இன்னொரு நிலம் மொழியில் முளைக்கும். தமிழின் ஆறாம் திணையாய் பனியும் பனிசார்ந்த நிலங்களும் புலப்பெயர்வின் பின் விரிவாக மொழிக்குள் ஊன்றப்படுகிறது. புகைக்கூண்டுக்குள் தணற்கட்டைகளென அகநிலம் உள்ளெரிய பனிக்காலங்களை அச்சூட்டில் கடந்த முதற்தலைமுறையினரின் குரல்களில் கி.பி. அரவிந்தன் முதன்மையானவர். கணப்பின் சூட்டில் வாழும் கவிதைகள் கி.பி. அரவிந்தனுடையது. அதன் அகவுலகு நீறு பூத்து பின்னர் தழன்று கொண்டேயிருப்பது. நிலத்துடன் மரபின் பண் பிணைக்கப்பட்டிருக்கிறது. …

முதுமரபின் பெரும்பாணன்

மரபும் நவீனமும் சேரும் கழிமுகத்தின் நீர்ச்சுழியில் பண்ணெடுத்து மீட்டிய முதுமரபின் பெரும்பாணன் சு. வில்வரத்தினம். தமிழின் பழஞ்சுரங்கத்திலிருந்து மொழி ஆபரணங்களை நவீன வாழ்வின் ஆன்மீகமென அணிவித்தவர். மரபான ஆன்மீகமும் அதிலிருந்து உதிரும் உள்வெளி மீதான கவனமும் மு. தளையசிங்கத்தின் மாணவனாகிய சு. வில்வரத்தினத்துக்குள் சுடர்கிறது. நவீன தமிழின் ஆன்மீகமான கவிதையுலகில் சு. வில்வரத்தினம் கவிதைகள் மகத்தான முன்னசைவுகளை உண்டாக்கியவை. குறியீடுகளாலும் படிமங்களாலாலுமாகிய ஆன்மீக நிலவெளி சு.வியினுடையது. ஈழநிலத்தின் புறக்காட்சிகளும் அகத்தீவிரங்களும் …

வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்

சுயம் பற்றிய ஆதாரமான கேள்விகள் தத்துவம் ஆன்மீகம் கலை இம்மூன்று தளங்களிலும் எழும் ஆதாரமான வடிவம் கவிதை. நான் யார்? எதன் பொருட்டு இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற பல கேள்விகள் கவிதை வரிகளுக்கு நிகரானவை. எல்லா அறிவுத் தளங்களிலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுபவை. சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகள் அவரது புனைவுலகின் மையக் கேள்விகளின் அடிப்படைகளைக் கொண்டவை. அவை தன் நிழல் எங்கிருந்து உருவாகிறது என்ற தற்போதத்தை …

தாயும் தோழியும்

ஈழவிடுதலைப் போராட்டம் உருவாக்கியளித்த நியாயங்களினதும் அற மீறல்களினதும் குரல்களில் ஒளவை முக்கியமானவர். வரலாற்றின் இடர்காலங்களில் மனித மாண்பினை நினைவுறுத்தும் குரல்கள் கவிதையில் எழுவதுண்டு. அவை எதிர்கொள்ளும் வரலாற்றுத் தருணங்களை தன் அனுபவத்திலிருந்து மொத்த மக்கள் திரளின் கூட்டு எதிர்காலம் குறித்த பார்வையாக விரித்தெடுக்கக் கூடியவை. ஒளவை அத்தகைய குரலாக ஈழத்தில் எழுந்தவர். தன்னை மின்மினியெனக் கண்டெடுக்கும் பெண் தன்னிலையும் போருக்குச் செல்லும் போராளியின் தன்னிலையும் ஒருங்கு திரளும் இணைவு ஒளவையில் …

எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் கடல்

மொழிக்குள் ஒவ்வொரு நிலக்காட்சியும் அந்நிலத்தின் மாந்தர்களும் எழுதப்படும் பொழுது அது மானுட விரிவின் எல்லைகளை விரிக்கும் செயல். கடல் ஒரு நிலமும் கூட. அதன் வாழிடத்திற்குள் மனமூறிய மனிதர்கள் கடலுள் வாழ்ப்பவர்களே. கடலே அவர்களின் மனநிலம். ச. துரையின் கவிதைகள் கடலின் மனிதர்களை வாழ்வாக்கி அளிப்பவை. அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து அலையடிக்கும் பெருங்கடலின் வற்றாத சிறகடிப்பை எழுதுபவை. துரையின் கவிதைகள் கடலிடம் எப்பொழுதும் முடிவுறாமல் கரையை நாநீட்டித் தொடும் வேட்கையைப் …

ஆடு ஜீவிதம்

இலக்கிய குரங்குகளில் பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற மலையாள நாவல் பற்றிக் கதைத்திருக்கிறேன். அண்மையில் இந்த நாவல் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. இரண்டையும் எவ்விதம் நோக்க வேண்டும் என்ற ஒருசில அடிப்படைகளைத் தொட்டிருக்கிறேன்.

நனைந்து கொண்டிருக்கும் மழை

தமிழிற்குள் எழுந்த பெண் தன்னிலைகளில் அபூர்வமான உலகத்தைத் தனக்கென நெய்துகொண்டவர் ஃபஹீமா ஜஹான். அவரது கவியுலகிற்குள் சிறுமிகளும் கோழிக்குஞ்சுகளும் ஆட்டுக்குட்டிகளும் இயற்கையும் பல்வேறு வரிகளினூடாகத் துலங்கி வந்தன. பெண் தன்னிலைகளின் கசப்பும் துவர்ப்பும் ஃபஹீமாவில் வெளிப்பட்டாலும் அவரது வாழ்வை அணுகும் பார்வைக்குள் ஊடிழையும் பரிவும் கரிசனமும் மானுடப் பெருக்கின் மையவிசைகளுடன் இணைவு கொள்வது. ஃபஹீமா ஜஹானின் கவியுலகில் ஒரு வித நனைந்து கொண்டிருக்கும் மழையின் இயல்பு இருக்கிறது. தான் எதுவோ …