ஆட்டுக்குட்டி சுவேதா : குறிப்பு

பொங்கல் பரிசாக, கிரிசாந்தின் கதையைப்படித்தேன். அன்பும் காருண்யமும் உணர்ச்சிகளின் மோதுகையும் இணைகையுமே வாழ்க்கை என்பதை உணர்த்தும் கதை. மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களோடு மட்டும் வாழ்வதில்லை. அப்படி வாழவும் முடியாது. அவர்கள் சூழலோடு இணைந்தே வாழ்கிறார்கள். அந்தச் சூழல் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாமே தவிர, சூழலை நீங்கி வாழ முடியாது. இங்கே சுவேதா என்ற ஆட்டுக்குட்டியின் உலகமே கதையாகியுள்ளது. அந்தக் குட்டி வாழ்கின்ற சூழலில் உள்ள மனிதர்கள், நாய்கள், …

ஆட்டுக்குட்டி சுவேதா

“உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்” என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி ‘மாட்டேன்’ என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடிசுவேதா என்கிற தூய வெண்ணிறமே உருவான ஆட்டுக்குட்டி இன்று முழுவதும் மெளன விரதம் பூணுவது என முடிவெடுத்தாள். அவளுக்குத் தன் அக்காவான பாலாடை மஞ்சள் வண்ணம் கொண்ட சுகந்தினியுடன் பிணக்கு. சிறிய ஓட்டுக்குள்ளால் நத்தை தலை நீட்டுவது போல மேகங்களுக்குள்ளால் …