தன்னறம் விருது 2025 : ஆவணப்படம்

கடந்த வருடத்திற்கான தன்னறம் இலக்கிய விருது எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான சீனிவாச ராமாநுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படுபவர்களைத் தன்னறம் குழுவினர் எடுக்கும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. ஒவ்வொரு ஆளுமையினதும் துல்லியமான இயல்புகளையும் உடலசைவுகளையும் கைப்பள்ளத்தில் அள்ளிச் சேர்க்க முனைபவை. ஷோபா சக்தியின் ஆவணப்படம் என் மனதுக்கு மிக நெருக்கமானது. இன்றளவும் ஈழத்தில் அவரது புனைவுலகம் குறித்த முழுமையான மதிப்பீட்டை நான் உட்பட எவரும் இன்னும் எழுதவில்லை. ஒரு இரகசிய இயக்கத்தின் …

திரிச்சுடரின் உள்ளே ஆடும் கலை

எந்தவொரு கலை வெளிப்பாட்டிற்கும் அதனுள் இயங்கும் படைப்பாளியின் ஆளுமையின் கூர்மையான பங்களிப்பிருக்கும். கலையின் ஒருமையும் வெளிப்படும் அழகியலும் அவரின் தனித்த அகத்தின் விந்தையான கலவையால் உண்டாவது. ஓர் ஆளுமையென்பது சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஆழ்மனத்தின் ஒரு துளி அவரில் செறிந்து கனிகிறது. நாம் இன்று முன்வைக்கும் பண்பாடென்பது அத்தகைய ஆளுமைகளுக்கு ஊடாக வெளிப்படும் ஒரு கனவையே. அவர்களின்றி ஆழ்மனம் வெளிப்பட முடியாது. வெளிப்பட்டு சமூகத்துடன் உரையாடி அதை மாற்ற முடியாது. …

அகவிழி : ஆவணப்படம்

அகவிழி ஆசிரியையான சரஸ்வதி அவர்கள் நான்கு வயதிலிருந்தே கண்பார்வை இல்லாதவர். சென்னை ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக, மேல்நிலை வகுப்பு (11 மற்றும் 12) மாணவ மாணவிகளுக்கு ஆங்கிலப் பாடம் போதிக்கிறார். பிரெய்ல் முறையில் கற்பிக்கும் அகவிழி ஆசிரியை இவர். தன் வாழ்வில் இதுகாறும் தான் கடந்தவந்த வாழ்வுச்சூழ்நிலைகள் குறித்தும், தனக்கும் தன் அம்மாவுக்குமான உறவு குறித்தும் அவர் பேசுவதனைத்தும் நம்மை நெகிழ்வில் …

விலங்கும் மனிதரும்

மனிதர்கள் என்ற தன்னிலையையும் விலங்குகள் என்ற பிறர்நிலையையும் மனிதர்களாகவே உருவாக்கிக் கொண்டவை. இயற்கையில் அனைத்தும் உயிர்களே. மனிதர் இவ்வுலகையாளும் கட்டுப்படுத்தும் உயிர்களாக வளர்ந்த போதே மனிதர் எதிர் விலங்குகள் என்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. மனிதரைச் சிந்திக்கத் தெரிந்த விலங்குகளாகவே நான் அணுகுகிறேன். விலங்கு என்பதைக் கீழானதாகவோ போதமற்றதோகவோ நான் கருதவில்லை. அவற்றுக்கிருக்கும் உயிரியல்பின் தன்மைகள் சார்ந்து அவையும் மனிதர்கள் போலேயே தமக்கான தனித்தனி வாழ் முறைகளை இந்தக் கிரகத்தில் உருவாக்கியிருக்கின்றன. …

இலக்கியம் எனும் இயக்கம்

இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012 ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் தான் அவரது வீடிருந்தது. பின் பல காலம் பிள்ளைகளின் படிப்பிற்காக அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வாடகை வீடுகளில் தாங்கினார். ஒரு சித்தாயுர்வேத வைத்தியர். …

பிணமெரியும் வாசல்

புத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக்கு சென்றோம். தேநீர் தந்தார்கள். ஆற வைத்துவிட்டு, அங்கிருந்த தோழர்களோடு கதைத்தோம். ”இரவு பகலாக சுழற்சி முறையில் இருக்கின்றோம். ஒரு நேரத்தில் ஐம்பது தொடக்கம் அதிகம் ஐநூறு பேர்வரை வந்து செல்வார்கள். எல்லாருக்கும் வேலை உண்டு. ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் உதவிக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பது எவ்வளவு விலை கொடுத்தும் கிடைக்கமுடியாத அனுபவம். இங்கே உள்ள …

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் …