ஒளியிலே தெரிவது : சிறுகதை
நாங்கள் ஒரு கூட்டமாக அந்த மைதானத்தின் கரையிலிருந்த வாகை மரத்தின் வேர்ப்புடைப்பில் அமர்ந்திருந்தோம். தின்னவேலிச் சந்தைக்கு அருகிலிருந்த பாடசாலையின் மைதானம் அது. வெறும் புழுதி நிலம். உச்சி வெய்யில் நடு மைதானத்தில் உள்ளங்கை போலத் தெளிந்து கிடந்தது. பிரகாஸ் தனது காற்சட்டையின் சிப்பை திறந்து ஆண் குறியை வெளியே எடுத்து பிடித்தபடி “என்ர சாமான் எவ்வளவு பெரிசெண்டு பார்த்தியளேடா” என்றான். எல்லோரும் புதினமாக அதைப் பார்த்தோம். கப்பல் வாழைப் பழம் …
