எனது கவிதை நூலான வாழ்க்கைக்குத் திரும்புதலின் வெளியீட்டு நிகழ்வினை மழையினாலும் புயலினாலும் உண்டான இடர்க்கால நிலமைகளைக் கருத்தில் கொண்டு வரும் கிழமைக்கு மாற்றியிருக்கிறோம். 01. 12. 2024 இடம்பெற இருந்த நூல் வெளியீடு 08. 12. 2024 அன்று காலை பத்து மணிக்கு யாழ்…
Month: November 2024
மலரினைச் சாத்துமென்!
மலரினைச் சாத்துமென்! இரத்தமூறிடும் கால இடுக்கில்புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்உயிர்களை இழந்தும்ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்மண் தான் அறியும்இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொருமலரினைச் சாத்துமென்! * காலத்துயர் போகிற போக்கில்விளம்பர வரிகளுடன் இனங்கண்டு…
பித்தும் கவிதையும் : 02
பத்தொன்பது வயதில், கவிஞரும் ஓவியரும் அரசியல் பத்தி எழுத்தாளருமான நிலாந்தன் அவர்களிடம் பேச்சு மூல ஆங்கிலம் கற்கச் சென்றேன். அவருடன் அரசியல் பற்றியும் இலக்கியம் பற்றியும் நிறைய உரையாடியிருக்கிறேன். கவிதைகளை வாசித்து அபிப்பிராயங்கள் சொல்லுவார். ஓர் ஆளுமையாகவும் ஆசிரியராகவும் என்னை அவர் ஈர்த்தார். றமணன்…
பித்தும் கவிதையும் : 01
கவிதையால் மட்டுமே அடங்கக்கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு. * வைரவர் கோயிலின் திருவிழாக் காலங்களில் குஞ்சுக்கண்ணா பாடும் தேவாரங்களைக் கேட்டு நின்றது கவிதையை அறிவதன் தொடக்க நினைவாக இருக்கிறது. எதிர் நிற்கின்ற தெய்வ உருவைக் குரலால் அழைத்துச் சொல்லால் உயிரளித்து “ஆரொடு…
ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்
நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக அனுப்பியிருந்தார்கள். ஒரு கவிதை மலையாளத்தில் விளங்கப்பட்டு ஆங்கிலத்தில் கடக்கும்…
வாழ்க்கைக்குத் திரும்புதல் : அறிமுக நிகழ்வு
எனது முதலாவது கவிதைத் தொகுப்பான வாழ்க்கைக்குத் திரும்புதல் குமாரதேவன் வாசகர் வட்ட முதல் வெளியீடாக டிசம்பர் மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இலக்கிய வாசகர்கள், நண்பர்களை நிகழ்வுக்கு அன்புடன்…
ஈழத்துக் கவிதைகள் : கடிதம்
கிரி, ஆதியின் கவிதைகள் குறித்து நீங்கள் எழுதியிருந்த அகழ் கட்டுரை படித்தேன். நல்ல அறிமுகக் கட்டுரை. ஆதியை வாசிப்பதற்கான வரைபடத்தை கொடுத்திருக்கிறீர்கள். போரை உருக்கு ஆலையின் துருத்தியின் தீ ஆகவும், போரை வேறு மலைகளில் இருந்து இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியுமெனச் சொன்ன சொல்லாட்சிகளும் கட்டுரையில்…
ஒற்றைக்கோடை : அறிமுகக் குறிப்பு
கவிஞர் ஆதி பார்த்திபனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ஒற்றைக்கோடை தாயதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அந்த நூல் குறித்தும் ஆதி பார்த்திபன் மற்றும் ஈழத்து இலக்கிய சூழல் பற்றியும் சிறு கட்டுரை அகழ் இணைய இலக்கிய இதழில் வெளிவந்திருக்கிறது.
130: செண்டுவெளியாட்டம் : 02
“மானுடர் அதிகாரத்தின் முன்னரே தலை பணிவர். அதுவும் பொய்யமைவே. எங்கும் எதிலும் பணிய முடியாதவர் என எவருமில்லை. பணிவில் எஞ்சும் ஆணவமே பணிபவரின் மெய்யுரு.அறமும் அதிகாரம் கொண்டதே. அதன் அதிகாரமே முற்றுறுதியாதன வல்லமை கொண்டது. ஆகவே அரசர்கள் அதை அஞ்சுகிறார்கள். காவியர்கள் அதை வணங்கி…
நோவிலும் வாழ்வு : உரைகள்
வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024 யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வின் பதிவு.