எனது நிலம், எனது கடல்

யாழ்ப்பாணப் பட்டினத்தின் கோட்டைக்கு அருகில் உள்ள பண்ணைத் தரவைக் கடலில் இலங்கையின் தேசியக் கொடிகள் பல ஊன்றப்பட்டு காற்றிலாடுவதை சில நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். பட்டினத்தின் கடலில் நுடங்கியும் சீறியும் ஆடும் அக்கொடிகள் என்னை எரிச்சற்படுத்துகின்றன. மோதி நுரைத்து ஆர்த்தெழும் அலைகளே இல்லாத இந்தத் தப்புக் கடலைத் தான் நான் பார்த்து வளர்ந்தேன். எத்தனை மூர்க்கமற்ற எளிய நீர்ப்பரப்பென்றாலும் அது என் கடல் என்ற உணர்வு எனக்கிருக்கிறது. கடந்த தேசிய …

தமிழ்த்தேசிய அழகியல் விமர்சனம் – ஒரு கேள்வி

‘வளர்’ காலாண்டிதழில் மூத்த எழுத்தாளர் அ. யேசுராசா அவர்கள் எழுதிவரும் பகிர்தல் எனும் தொடரில் யதார்த்தனின் முதல் நாவலான நகுலாத்தை பற்றிய சில பகிர்வுகளை எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களின் தொகுப்புகளைக் கவனமாக வாசித்து அதன் சொற்பிழைகள், எழுத்துப்பிழைகள் வரை குறித்து அவற்றை எழுத்தாக்கி முன்வைக்கும் அவரது பணி முக்கியமானது. அவர் குறிப்பிட்டிருக்கும் எழுத்துப்பிழை மற்றும் மொழிநடை தொடர்பிலான கருத்துகளை உளமார ஏற்கிறேன். எழுத்தாளராகவும் இதழியலாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அவரது பணிகளை நான் …

ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 01

‘முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்’—மத்தேயு 5:24 பைபிளில் உள்ள கதையொன்றின்படி ஆதாமினதும் ஏவாளினதும் மூத்த மகன் காயீன், இளைய மகன் ஆபேல். இருவரும் தங்கள் விளைச்சல்களிலிருந்து காணிக்கையை கடவுளுக்குச் சமர்ப்பிக்க வருகிறார்கள். கடவுள் ஆபேலின் காணிக்கையில் மகிழ்கிறார். இதனால் கோபமுற்ற காயீன் தனது சொந்தச் சகோதரனாகிய ஆபேலைக் கொல்கிறான். அதன் பின், கடவுள் காயீனிடம் உன் தம்பி எங்கே என்று கேட்கிறார். காயீன், …

சூல் கொளல்: 02

இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன. உலகெங்கும் அரசின் இராணுவங்கள் …

கருத்தியல் தலைமையும் அறமும்

சிறுகுழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், சமூகங்களாக உருப்பெற்று ஒரு மொத்தமானுட, பூமிபற்றிய உடன்படிக்கைக்கைக்குமான உரையாடல் வெளிக்குள்வந்து சேர்ந்திருக்கிறோம் .சமூகம் மற்றும் பூமி போன்றவற்றுக்கு இடையில் மனிதர்கள் உருவாக்கியிருக்கும் உடன்படிக்கையானது, எத்தகையது என்பது காலத்திற்குக்காலம் மாறியும் மேம்பட்டும் வந்திருக்கின்றது. நமதுஎதிர்காலத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கு ஜனநாயகத்தைஅடிக்கட்டுமானமாக உருவாக்கத் தொடங்கியிருக்கிறோம். திக்கற்ற அலைச்சலில் இருந்து திரும்பும் மனித சமூகம் வேர்கொண்டுவாழத்தொடங்கியதற்குப்பின் திரும்பவும் பொருளுள்ள அலைதலே வாழ்வாகும். இதற்கிடையில் அறிவு மற்றும் அதிகாரப்பரம்பல் பூமியின் சகல …

இனப்படுகொலைக்கெதிரான ஓர் மக்கள் இயக்கம்

முள்ளிவாய்க்கால் பேரவலமும் ஆயுத வழிப்போராட்டமும் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் இதன் விளைவுகள் ஆழமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சரியாக மதிப்பிடப்பட்டு அதன் மூலமான சமூக அசைவென்பது நிகழவில்லை. பல்வேறு இழுவிசைகளினாலும் நாட்டின், சர்வதேசத்தின் நிலமைகளினாலும் தமிழ் மக்கள் தம்மைத் தாம் விரும்பிய திசையில் அசைத்துச் செல்வது இன்னமும் முடியாததொன்றாகவே இருக்கிறது. சமூக பண்பாட்டு அரசியல் தளங்களில் இடம்பெற்ற மாற்றங்கள், மக்களை குவிமையமாகத் திரள்வதிலிருந்து விலத்தி …

வெடிமணியமும் இடியன் துவக்கும்

மதிசுதாவின் வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறு படம் பார்த்தேன். தொடக்கத்திலே மதிசுதா ஒரு முழு நீளப்படத்திற்கு எழுதப்பட்ட திட்டமிடப்பட்ட, கதையைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் சிறுபடமாக எடுத்து முடித்ததாகப் போட்டிருந்தார். ‘நல்லபடம்’ எடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஈழ சினிமா கொடுக்க கூடிய முதல் நெருக்கடி, பணம். எனக்கு அதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. அச்சூழலை மாற்ற வேண்டும் என்பதிலும் பெருத்த உடன்பாடு உள்ளது. ஆனால் இது படத்திலே எழுதப்பட்ட ப்ரேமாக …

நிலமீட்புக்கான மக்கள் போராட்டங்கள் – அடைவுகளும் நிலமைகளும்

இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் தமிழ் மக்களின் பூர்விக நிலங்களுக்குள் குடியிருக்கும் இராணுவத்தை வெளியேற்றி அல்லது அரசு கையகப்படுத்தியிருக்கும் காணிகளை விடுவித்து தமது நிலங்களைத் தமக்கே தாருங்கள் என்று தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக வழிப் போராட்டங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லிய அலைபோலத் தானும் இடைவிடாது மோதிக்கொண்டிருந்தனர். இரண்டாயிரத்துப் பதினைந்து, ஆட்சி மாற்றத்தின் பின்னர், பெருமெடுப்பில் இப்போராட்டங்கள், வெகுசன எழுச்சியாகவும், பிறரையும் உள்ளீர்த்துக் கொண்ட விரிந்த போராட்டங்களாகவும் உருமாறின. முதலில், …

இலக்கியமும் அரசியலும்

இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளைக் கையாளுதல் உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது சாட்சியமளித்தல் என்ற இரண்டும் தான் அதன் பிரதான இயங்குதிசைகள். இரண்டு வேறு வேறு நாவல்களையும் எழுத்தாளர்களையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டு இதன் தன்மைகளை உரையாடலாம். ஒன்று, வாசு முருகவேல் எழுதியுள்ள ஜெப்னா பேக்கரி. ‘முஸ்லிம்கள் …

பிணமெரியும் வாசல்

புத்தூர் சந்தியைத்தாண்டி உள்ளே கலைமதி விளையாட்டுக்கழகத்தை ஒட்டியுள்ள மக்கள் மண்டபத்தின் முன்னாலுள்ள போராட்டப் பந்தலுக்கு சென்றோம். தேநீர் தந்தார்கள். ஆற வைத்துவிட்டு, அங்கிருந்த தோழர்களோடு கதைத்தோம். ”இரவு பகலாக சுழற்சி முறையில் இருக்கின்றோம். ஒரு நேரத்தில் ஐம்பது தொடக்கம் அதிகம் ஐநூறு பேர்வரை வந்து செல்வார்கள். எல்லாருக்கும் வேலை உண்டு. ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் உதவிக்கொண்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பது எவ்வளவு விலை கொடுத்தும் கிடைக்கமுடியாத அனுபவம். இங்கே உள்ள …