எரியும் நெருப்பும் காற்றில்: 02

சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற தலைப்பில் சித்திரலேகா மெளனகுரு சிவரமணியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை அக்காலட்டத்தின் மகத்தான ஆவணங்களில் ஒன்று, அதன் பின்னணியில் 1985 இலிருந்தான விடுதலைப்போராட்டத்தின் தன்மை மாற்றத்தைத் தீர்க்கமாக எதிர்கொள்கிறது அவ்வாவணம். அதிலிருந்து இந்த ஆக்கத்திற்குத் தேவையான பகுதிகளை இப்பகுதியில் சேர்த்திருக்கிறேன். * “சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். குடும்பத்தில் இரு பெண் பிள்ளைகள். சிவரமணி மூத்தவர். சிவரமணியின் தந்தையார் …

எரியும் நெருப்பும் காற்றில்: 01

‘ஓ என் தேசமேஉன் மணல் வெளிகளில்நான் நடக்கின்றேன்உன் நிர்மலமான வானத்தில்நட்சத்திரங்களைநீ என் பார்வைக்கு பரிசளித்துள்ளாய்உனது சிரிப்பினால் என்சகோதரர்கள்வாழ்கின்றனர்நீ போர்த்துள்ள சோலையினுள்ஒளித்து வைத்துள்ளவெண் முத்துக்களை என் தங்கைகள்அணிந்துள்ளனர்வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னைஅணிந்துள்ளாய் – உனக்குநான் கொடுப்பதுஉயிர் மட்டுமே’. 1985 இல் எழுதப்பட்ட சிவரமணியின் கவிதை இது. விடுதலைக்கான கனவு இளைஞர்களின் மனதில் சூல் கொண்ட காலத்தில் பெருங்கனவுகளில் வாழ்ந்த ஒரு கவிஞை சிவரமணி. வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணித்துள்ளாய் என்று …

கன்னி அம்மன், அப்பாவும் கோவர்த்தன கிரியும்: கடிதம்

கன்னி அம்மன் வயல்களில் சப்த கன்னிகளுக்கு கோயில் வைப்பார்கள். ஏழு பெண்கள். அவர்களுக்கும் நாகதம்பிரானுக்கும் அறுவடை மற்றும் விதைப்பு காலத்தில் தான் சிறப்பு வழிபாடு. அதுவரை அவர்களின் அறையில் தூக்கணாம் குருவியும் கூடு கட்டலாம். அவ்வளவும் சுதந்திரமாண பிராமணர் அற்ற கோவில்கள். அவை போபவர் வருவபர் எல்லாம் பூசை செய்தாலும், ஆரம்பத்தில் மரத்தின் கீழ் தன்னை வைத்த வயல்காரனின் பிள்ளை மீது அவளுக்கை ஒரு காதல் அதுவும் பக்தியை பாலனிடம் …

சூல் கொளல்: 03

1980 காலகட்டத்தில் தமிழ்த்தேசியவாதம் முற்போக்கான ஏற்புடமையுடன் மக்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. பெண் கவிஞர்கள் தேச விடுதலையில் தமக்கான பாத்திரத்தை வரித்துக் கொண்டனர். இலங்கை இராணுவத்தின் அடக்குமுறைகளுக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களும் சித்திரவதைகளும் வன்புணர்வுகளும் படுகொலைகளும் ஆயுதம் தாங்கி இராணுவத்தை அழிக்கும் ஆவேசத்தை வழங்கியிருந்தன. 1986 இல் பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடாக வந்த சொல்லாத சேதிகள் தமிழ்ச் சமூகத்திற்குள் உண்டான பெண்ணிய நோக்கிலான விடுதலை …

சூல் கொளல்: 02

இச் சமகாலத்தில், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வழியே ஆயுத வழி விடுதலை பற்றிய வாழ்வினை, ஏற்கனவே உலகில் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் கவிதைகள், விடுதலையின் படிமங்களாகத் தமிழுக்குள் கொண்டு வருகின்றன. போராட்டங்களின் நியாயங்களையும் மக்களின் துயரங்களையும் எப்படி மொழியில் நிகழ்த்தலாம் என்பது தமிழுக்குள் வந்து சேர்ந்த பொழுது அதன் சாயல்கள் கொண்ட கவிதை வரிகள் எழுதப்படலாயின. அவை பின்னர் பண்பாட்டில் வேர் கொண்டு தனக்கான படிமங்களை அடைந்தன. உலகெங்கும் அரசின் இராணுவங்கள் …

கனவுச் சொல் : முதற் கடிதம்

இந்தக் கவிதை இன்றுதான் வாசித்தேன்.. ஒரு தனிமையில் இருந்த மனிதன் அனுப்பிவைத்த இசைத் தொகுப்பு.. காமம் சொல்லி .. தோல்வி கண்டது… அப்ப காதலியை நினைச்சு சுயமைதூனம் செய்து எழுதுறான் என்று கூட யோசிச்சன்.. அது ஒரு தோல்வியை அல்லது அடையப்பாடாத இலக்கு நோக்கிய வேதனையா என்று பாத்தன் அதுவும் இல்லை கடைசியில் இடப்பட்ட முத்தங்கள் காதலின் எச்சங்கள் தான்… இது காதலிக்கு அனுப்படால் seductive art என்றும் பாக்க …

சூல் கொளல் : 01

பெருமழை வருவதற்கு முன் மேகம் கனிந்து காற்றில் கூடும் ஈரமென தமிழ்க்கவிதைக்குள் விடுதலை பற்றிய கனவு வந்து சேர்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவடைந்து இலங்கை தனி நாடாக ஆவதற்கு முன்னிருந்தே இத் தீவில் சிங்கள, தமிழ் இனத்துவ முரண்பாடுகளுக்கான வரலாறுகள் உயிர்பெற்று இரு சர்ப்பங்களென வளர்ந்தன. காலனித்துவ ஆட்சிக்கெதிரான போக்கிலே சிங்களத் தேசியவாதமும் தமிழ்த்தேசியவாதமும் வளர்ந்து வால் நீண்டிருந்தன. சிங்களமும் பவுத்தமும் அநகாரிக தர்மபாலாவினால் முன்வைக்கப்பட்ட சமநேரத்தில் சைவமும் தமிழும் …

எரியும் நெருப்பும் காற்றில்: 03

அன்னா அக்மதோவா பற்றி நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் அக்மதோவாவை வாசிக்கும் பொழுது சிவரமணி அக்காவும் புலிகளால் கடத்திக் கொல்லப்பட்ட செல்வி அக்காவும் அவரது காதலரும் நினைவுக்கு வந்ததாக எழுதியிருந்தார். இந்த நினைவிலிருந்து ஒரு பொறி என்னில் ஒட்டியிருந்தது. நீண்ட காலம் கழித்து சிவரமணியின் இறுதிக்கால எழுத்துகளை வாசித்த போது நாம் நமது அன்னாவை இழந்து விட்டோம் என்றே தோன்றுகிறது. மகத்தான கூர்மையும் ஆழுள்ளத்தின் குரலை ஒலிக்கும் …

சூதர்கள், பாணர்கள், கவிஞர்கள்

அறங்களை ஆக்குதலும் காத்தலும் விரித்தலும் அவை வழுவும் போது சுட்டுதலும் கவிதையின் முதற் தொழில். தமிழ்க் குடியின் நெடுவரலாற்றில் கவிஞர்களின் பணி இதுவே. வாழ்க்கைக்கான மேலான கனவுகளை ஆக்கி அளித்தலும் அளிக்கப்பட்ட கனவைக் காத்தலும் சொற்களின் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓரு வகையில் மானுட நிகழ்வை அதன் எளிய அன்றாடத் தர்க்கங்களிலிருந்து விடுவித்து இந்த விலங்குக் கூட்டத்தின் மேலான தன்மைகளைப் புனையும் செயல் கலை. எது நேரிடினும் அறத்தின் பொருட்டு …

விடுதலையில் கவிதை

நிலத்திலிருந்து வானென எழுந்த மாபெரும் பழங்காலப் பழுப்பு நிறச் சீலையொன்றில், புள்ளியிலிருந்து, எழுந்து, விரிந்து, பரவி, ஒளிர்ந்து, உதிர்ந்து, வீழும், நிறங்களாலான வரிகளை நான் கற்பனை செய்கிறேன். உதிரமிட்டு நிகழ்ந்த விடுதலைப் போராட்டம் இந்தத் தீவின் ஒவ்வொரு விளிம்பிலும் அலையடித்திருக்கிறது. எத்தனை மகத்தான கனவுகளின் கருப்பை இந்த மண். எத்தனை மகத்தான அழிவின் சாட்சி இந்த மண். ஒரு மண்புழுவின் வால் மிதித்தால் கூட அது சுழன்றசைந்து ஒரு கணம் …