32: யாகுப ரூப
காலம் உறைந்து மீண்டும் கலையும் காலம் எத்துணை எளியது என நோக்குங்கால் ஆடற் சித்தரின் நுதலில் விழியொன்று மெல்லக் கீறி இமைகள் உதித்தன. தீயின் பல்லாயிரம் பல்லாயிரம் மடிப்புகளில் ஓர் அலையின் நுரையில் அதன் நுரையின் அலைநெளிவில் நெளிவின் கணமென கணத்தின் கணமென ஆடலிறை ஆடிச்சிரிக்குமொலி அப்பல்லாயிரம் பல்லாயிரம் தீ மடிப்புகளிலும் ஓர் அதிர்சுருளென விரிந்து சுருங்கியது. ஒரு சுவாசத்தின் உள்ளிழுக்கும் கணங்களென அவற்றின் எண்ணிலா அதிர்வுகள் எண்ணற்ற கழல்கள் …
