51: திசையிலான்: 02
கிழக்கின் கீழ்த்திசையில் கழலில் குலுங்கும் சிலம்புடன் உவகையின் நடுக்குடன் ஒரு கழல் மணலின் கன்னம் பிளந்து செதுக்கப்பட்டிருந்தது. கொற்றன் தன் விழிகளால் துழாவி அக்கால் ஒரு பெண்ணினுடையதெனக் கண்டான். கழல் நெளிவில் அமைந்த மயக்கை நோக்கி நின்று விரல்கள் மலர்க்கன்றுகளென மண்ணை உந்தியெழும் பாவனையை உற்று வரிகளிடை மீண்டான். அனல் கீழ்க்கிழக்கை நோக்கி கரும்புகையென நீண்டது. அன்னையின் கழலே போற்றி என் அப்பனின் அணங்கே போற்றிசொப்பனம் மீறியவள் போற்றிசக்தியே அனலே …
