60: பாடு மீன்கள்
அறியாத போது சிந்தும் கண்ணீர் ஆயிரம் மடங்கு சிறகுகள் கொண்டவை. அவை மேனியை மிதத்தி அகத்தை உருக்கி திரவச்சிறகுகள் பூண்கின்றன. காலில்லாக் கண்ணீர் கன்னத்தில் நடக்கின்றது. விழியில்லா அந் நீர் விழிமயக்கு அளிக்கிறது. கண்ணீரின் மொழி ஒற்றைச் சொல்லால் ஆனது. அச்சொல் வைரத்தின் பட்டைகளெனத் திசைக்குள் திசையவிழ்ந்து பொருள் கொள்கின்றன. இன்பத்தின் நாவுகள் சிரசற்றவை. நாவு மட்டுமே ஓர் உடலென அமைந்தவை. நாவின் நரம்புகளில் இன்பமென்பது அனைத்துச் சுவைகளையும் கொண்டது. …
