மாயப்பாறை : மதார் கவிதைகள்

அகழ் இணைய இதழில் மதாரின் மாயப்பாறை கவிதைத் தொகுப்பைப் பற்றிய இசையின் நோக்க நோக்கக் களியாட்டம் என்ற கட்டுரை நல்லதொரு அறிமுகம். மதாரின் கவிதைகளில் இழையோடும் தீக்கணங்கள் வியப்பூட்டுபவை. மெல்ல உதடுகளுக்குள் புன்னகை அலைகளென வீசக் கூடியவை. அவரின் கவிதைகளில் ஒன்று, “உன்னைத் திருமணம் செய்துகூட்டிப் போவதுதாயின் கருவறையிலிருந்துவெளிவந்த உன்னைதோளில் தூக்கிப் போட்டுபோவது போலத்தான்.நீ அழுது தூங்கிவிழிக்கும்போதுநான் உனக்குத் தாயாகியிருப்பேன்.தந்தையுமாகியிருப்பேன்தொட்டிலில் உன்னைப் போட்டு ஆட்டுவேன்பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும்”

ரத்த சிம்பனி

சில கவிதைகளின் வரிகள் நன்கு பழகியதும் அறிந்ததுமான தங்கத்தாலான சிம்மாசனத்தை நோக்கிய படிக்கட்டுகள் போலிருக்கும். அதன் ஒவ்வொரு அடியையும் நாம் அறிந்தது தான். ஆனால் திடீரென்று ஒரு பொறிக்கணத்தில் அங்கு ஏற்கெனவே இருந்த பொற்சிம்மாசனத்திற்குப் பதிலாக புதிதாக ஒன்றை வைக்கும் பொழுது உருவாகி வரும் அழகு கொண்ட கவிதைகள் சிலவற்றை அண்மையில் வாசித்தேன். கவிஞர் வெய்யில் எழுதியிருக்கும் இக்கவிதைகள் பார்ப்பதற்குப் பழகியவை போலிருந்தாலும் புதிய சிம்மாசனங்களின் கூசும் ஒளி கொண்டவை. …

நடைக் கவிதைகள்

தேவதேவனின் புதிய கவிதைகளை அவரது வலைப்பூவில் வாசித்துக் கொண்டிருந்தேன். சிறு பிள்ளையின் கவிதைக் கொப்பி போல எளிமையான சொற்களும் வியப்பும் கொண்டவை. பலநூறு முறைமுறை சொல்லில் அமையப் பெற்றவை. ஆனால் அவை ஒரு நடைப் பழக்கம் போல அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. எனக்கு உவப்பானதாக இரண்டு கவிதைகள் நடைவழியில் புதுமலர்களெனத் தோன்றின. * நடைப்பயிற்சி எண்ணங்களை விலக்கியபடிஎண்ணங்களற்ற வெளிநோக்கிஅவன் நடந்துகொண்டிருந்தான் இப்போது அவன்எண்ணங்களற்ற வெளியில்நடந்துகொண்டிருந்தான் மரங்கள் நடுவே நடந்து செல்லும்ஒரு …

கவனச் சிதறல் பற்றி..

நம் காலத்தில் சலிப்பினாலும் பொருளற்ற வெற்றுக் கேளிக்கைகளாலும் தொடர்ந்து தங்கள் கவனிக்கும் திறனை இழந்து வரும் நூற்றுக்கணக்கானவர்களை நானும் அறிவேன். நானும் கூட இந்தச் சிக்கல் கொண்டவன். கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சமூக வலைத்தளங்களை தொடர்ச்சியாக கவனித்ததின் வழி என் மன அமைப்பில் உண்டான நுண்ணிய மாறுதல்களை கடந்த பத்து மாதங்கள் அவற்றை விட்டு நீங்கிய பின்னர் வெகுவாக உணர்கிறேன். முதலில் எதையும் கருத்தூன்றிக் கவனிப்பதில் தொடர்ந்து சில …

நோக்கின்மை

உலகத்தை நோக்குவதை நிறுத்திக் கொள்வது அல்லது வரைமுறைப்படுத்திக் கொள்வது இன்றுள்ள ஒருவர் செய்து கொள்ள வேண்டியது. எண்ணுக்கணகற்று இறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வசவுகளிற்கும் எதிர்மறையான சொற்களுக்கும் வெறுப்பிற்கும் துயரங்களுக்கும் அரசியல் சிக்கல்களுக்கும் இடையில் ஒருவர் தன்னைத் தான் நோக்கி வாழ்வை நிகரறிந்து வாழ்வதே பெருஞ் சவாலாய் ஆகியிருக்கிறது. உலகின் பொதுப்பார்வை வட்டம் இன்று சமூக வலைத்தளங்களால் வடிவமைக்கப்படுகிறது. எது நீதி எது அநீதியென ஆளுக்கொரு கோர்ட் தரப்புக்கு நான்கு லோயர்களென கொதிகலன்கள் …

சங்கறுத்துக் குருதிப்பலி

இலக்கியம் மனிதர்களுக்குள் தூர்ந்து போய்க் கொண்டிருக்கும் கற்பனை எனும் ஊற்றை வெட்டி ஆழமாக்கும் ஒரு கருவியாகப் பயன்படுவது. வாழ்க்கை பற்றிய பார்வைகளை உண்டாக்கிக் கொள்ள வாசிப்பு ஒரு மனிதரை எப்படி நகர்த்துகிறது என்பதற்கு வாசகரும் புத்தக வியாபாரியுமாகிய செந்தில்குமாருடைய இந்த நேர்காணல் ஒரு உதாரணம். அவரது சொற்களில் உள்ள கள்ளமின்மை இலக்கியம் மனிதரை எங்கனம் பண்படுத்துகிறது என்பதற்கு ஒரு சாட்சி.

Master class

பரிசல் கிருஷ்ணா ஜெயமோகனிடம் கேட்கும் கேள்விகளுக்கு ஜெயமோகனின் பதில்கள் இன்று எழுத வரும் இளைஞர்களுக்கும் வாசகர்களுக்கும் மிக அடிப்படையான வரையறைகளை முன்வைப்பது. கடுமையான நோன்பிற்கான ஆசார விதிகளைப் போலத் தோன்றுவது. இலக்கியத்திற்கெனத் தன்னை ஒப்புக் கொடுப்பதற்கான பலியைக் கேட்பது. இந்த நேர்காணலில் ஜெயமோகன் துல்லியமான அவதானிப்புகளை எடுத்துரைக்கிறார். சமூக வலைத்தளங்கள் தொடர்பிலும் சமூக சராசரிகள் பற்றியும் அவர்களது வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார். கலைக்கென ஒருவர் கொண்டிருக்கும் தீவிரம் மட்டுமே …

ஒரு வியத்தல்

கவிஞர் இசையின் வலைப்பூவில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவது கவிதை ‘ஒன்று விட்ட சித்தப்பா’. அக்கவிதையின் சொல்லொழுக்கில் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகு கொண்ட மொழி வீழ்கிறது. மனிதர் துவண்டு நம்பிக்கையிழக்கும் பொழுது அளிக்கப்படும் சொற்கள் கொள்ளும் பேரழகைக் கவிதையெனவும் சொல்லலாம். தெய்வீகம் என்பது தருணம் தான். அக்கணத்தில் அந்தச் சித்தப்பாவின் நாவில் எழுந்தது மானுடம் எனும் அகலாப் பெருநெருப்பின் நீர்மை. …

காதற் கடிதம் வாசிப்பவன்

கவிஞர் சபரிநாதனின் குமரகுருபன் ஏற்புரை தனித்துவமானது என எண்ணுவதுண்டு. தயங்கித் தயங்கி உண்மையைச் சொல்லும் சிறுவனைப் போலவும் யாருக்கென எழுதினாரோ அவருக்கே வாசித்துக் காட்டும் காதல் கடிதத்தின் இசையுடனும் இவ்வுரையை ஆற்றியிருப்பார். இப்பொழுது கேட்டாலும் அதே இனிமை.

மகத்தான ரத்தத்துளி

கலை இலக்கியங்களில் பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய ரொமாண்டிசிசக் காலகட்டம் அதற்கு முந்தையதான அறிவொளிக் காலகட்டம், கைத்தொழிற்புரட்சி காலகட்டத்து சிந்தனைகளுக்கு எதிர்வினையாக இயற்கையின் ஒரு பகுதியாக மனிதரையும் வாழ்வையும் முன் வைத்தது. கற்பனை, தனிமனித பார்வை மற்றும் இயற்கையை வியத்தல் ஆகியன பகுத்தறிவின் தர்க்கத்திற்கு அப்பாலான வாழ்வை நோக்கும் வழியென முன்வைத்தன. கைத்தொழிற் புரட்சியின் பின்னரான காலகட்டத்தில் பிரமாண்டமான தொழிற்சாலைகளும் கட்டடங்களும் நகரங்களின் உருமாற்றமும் வேகமாக நிலக்காட்சியை மாற்றியமைக்கத் தொடங்கின. இயற்கையை …