பாணன்களும் பாடினிகளும்

பாடலெழுதுவதும் கவிதையும் இரண்டு வேறு வேறு துறைகள். இரண்டினதும் தன்மைகள் வித்தியாசமானது. சட்டென நம்முன் எழும் பிரிப்பு என்பதுபாடலாசிரியர் என்பது தொழில். கவிஞர் என்பது தொழில் அல்ல என்பது தான். ஆனால் பாரதி சொல்வதைப் போல் எமக்குத் தொழில் கவிதையென்று சொல்லி வாழ்ந்தால் யானையில் மிதிபட்டே சாக வேண்டியது தான். தொழில்முறையால் மட்டும் அப்பிரிப்பு நிகழ்வதில்லை. நுட்பமான சில திறன்கள் சார்ந்த பிரிவு அது. கவிஞர் தன் சொந்த அனுபவத்தினை …

பச்சை மொழி

கவிதையின் அலங்காரங்கள் பொறுக்க முடியாத ஒருவர் அதனைக் கழற்றி வீசி எறிந்து கொண்டே எழுதும் கவிதைகள் என கற்பகம் யசோதரவின் கவிதைகள் மொழியில் நிகழ்கின்றன. பைத்தியமூட்டும் நம் காலத்தினது பெண் தன்னிலையின் குரல்கள் பித்தியும் ஆங்காரியுமாக எழுவதன் ஒரு கீற்று அவரிலும் திகழ்கிறது. மொழி தன் அறிவார்ந்த பச்சைத் தன்மையால் எழுத விழைபவை அவை. கற்பகம் யசோதரவின் கவியுலகில் யுத்தமும் அதன் அக இடுக்குகளில் மரித்த உயிர்க்கணங்களின் அலறலும் சமூக …

யட்சி வதியும் சரக்கொன்றை

தலம்: புவிதரு: சரக்கொன்றைபாடலருளியவர்: பெருந்தேவி எதிர்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் ஆடும் பொன் ஊஞ்சலென மொழியில் நிகழ்ந்தவை பெருந்தேவியின் கவிதைகள். பெண் தன்னிலைகளின் உன்மத்தமும் சீற்றங்களும் கசப்புகளும் பெருந்தேவி கவிதைகளில் ஆடுகின்றன. சொற்களவ் ஊஞ்சலில் குழந்தைகளைப் போல் வந்தமர்கின்றன. மெல்லக் கால் ஊன்றிப் பிற்காலத்திற்கும் எதிர்ப்படும் காலத்திற்குள்ளும் தலையும் காலும் நுழைக்கும் கவிதைகள். அவரது கவிதைகளில் உள்ள வாழ்க்கைகள் கடந்ததும் இன்றையதும் எதிர்ப்படுவதுமென முக்கால விருட்சத்தின் கிளையில் தொங்குபவை. இந்தத் தன்மை தமிழில் …

இரண்டு கையளவு ஒற்றைச் சூரியகாந்திப்பூ

தினசரியின் கொடுமணல் மீது கால் வெதுக்க நடக்கும் கவிஞர்கள் மொழியில் தோன்றுவதுண்டு. சமூகச் சிக்கல்களையும் மானுட நெருக்கடிகளையும் ஒன்றாகக் குவித்துப் பார்ப்பது எந்தவொரு அகத்தையும் கொந்தளிப்பூட்டக் கூடியது. சமூகத்தின் அழியாத சிக்கல்களினை மாற்றும் கருவியாகக் கவிதையையும் தன்னையும் ஆக்கிக் கொண்ட கவிஞர்களில் ஆத்மாநாம் முக்கியமானவர். அரசியல் கவிதைகள் மானுடரின் ஆன்மீகத்தை ஒரு நுனியால் பற்றிப் பிடித்து வளரும் பொழுதுதான் கற்சுவரில் கொடியென கவிதைகள் தழைக்கும். ஆத்மாநாமின் கவிதைகள்  தன்னகம் என்ற …

சாம்பலாய் அடங்கும் தாகம்

மொழியுள் நுழையும் உரிமைகளினதும் நீதிகளினதும் குரல்கள் சிலவேளைகளில் நேரடித்தன்மையான மொழியாகத் தம்மை பாவனை செய்வது உண்டு. அது தனது இயல்பின் சொற்பிசகாத் தோற்றமெனத் தன்னை முன்வைப்பதுமுண்டு. இவை தோற்ற வெளிப்பாடுகள். பலநூறு வகைகளில் சொல்லப்பட்டு அழகியலாக்கம், நுண்மையாக்கம், உருவகமாக்கம் நிகழ்வதன் மூலமே ஒரு கவிதை மொழியுள் வாழும் மனங்களில் தம்மை நினைவுறுத்திக் கொள்கின்றது. இந்தத் தன்மைகளை அடைவது ஒரு மொழிச்சூழல் கூட்டாக நடந்து செல்லும் நெடும்பயணம். பண்பாட்டில் இதுவொரு தினசரிச் …

அலைகளிற் தோணியென நங்கூரமிட்ட வீடு

நீதிக்கான மொழியைக் கவிதை பலவகைகளில் பயின்று வருகிறது. அறத்தை வகுத்துரைத்தல், அது கவனம் கொள்ள வேண்டிய எல்லைகளை மறுவிரிவு செய்தல், அதனுள் அதுவரை ஒலிக்காத தன்னிலைகளின் குரல்களைப் பாடவைத்தல் என்று அதன் பயில்வுகள் பல. மொழிக்குள் உருவான பெண் தன்னிலைகளின் நீதியும் வாழ்வுமாகிய குரல்களில் கோபத்தின் நுனி நாக்கென மொழி திரண்டவர் மாலதி மைத்ரி. அவரது கவிதைகளில் மீள மீள மொழியின் எல்லைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அன்றாடத்தின் நெருக்கடிகளால் தகிக்கும் …

பக்கத்துக்கட்டிலின் அன்பு

கவியுலகை ஒரு வைத்தியசாலை எனக்கொண்டால் அதில் ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு துறை நிபுணர்கள். சிலர் இதயத்திற்கானவர்கள், சிலர் மனதிற்கானவர்கள், சிலர் பெண்களுக்கான விசேட நிபுணர்கள்… இப்படி வகைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இதில் நிபுணத்துவம் உண்டு. ஆனால் அங்கிருக்கும் நோயாளியொருவரின் மனவுலகின் அடுக்குகள் அன்றாட நுண்மைகளால் துயர்களால் வேடிக்கைகளால் நம்பிக்கைகளால் ஆனவை. ஒரு பக்கத்துக் கட்டிலில் இருப்பவரின் துயர் கேட்பதெனவும் பரிவு கொள்பவரினதும் பாவனை கொண்ட கவியுலகு ந. சத்தியபாலனுடையது. மொழியின் …

பனித்திணைப் பாணன்

ஒரு நிலம் மனதிலூன்றியவர்கள் நிலம்கடக்கும் போது பெயர்ந்த இன்னொரு நிலம் மொழியில் முளைக்கும். தமிழின் ஆறாம் திணையாய் பனியும் பனிசார்ந்த நிலங்களும் புலப்பெயர்வின் பின் விரிவாக மொழிக்குள் ஊன்றப்படுகிறது. புகைக்கூண்டுக்குள் தணற்கட்டைகளென அகநிலம் உள்ளெரிய பனிக்காலங்களை அச்சூட்டில் கடந்த முதற்தலைமுறையினரின் குரல்களில் கி.பி. அரவிந்தன் முதன்மையானவர். கணப்பின் சூட்டில் வாழும் கவிதைகள் கி.பி. அரவிந்தனுடையது. அதன் அகவுலகு நீறு பூத்து பின்னர் தழன்று கொண்டேயிருப்பது. நிலத்துடன் மரபின் பண் பிணைக்கப்பட்டிருக்கிறது. …

முதுமரபின் பெரும்பாணன்

மரபும் நவீனமும் சேரும் கழிமுகத்தின் நீர்ச்சுழியில் பண்ணெடுத்து மீட்டிய முதுமரபின் பெரும்பாணன் சு. வில்வரத்தினம். தமிழின் பழஞ்சுரங்கத்திலிருந்து மொழி ஆபரணங்களை நவீன வாழ்வின் ஆன்மீகமென அணிவித்தவர். மரபான ஆன்மீகமும் அதிலிருந்து உதிரும் உள்வெளி மீதான கவனமும் மு. தளையசிங்கத்தின் மாணவனாகிய சு. வில்வரத்தினத்துக்குள் சுடர்கிறது. நவீன தமிழின் ஆன்மீகமான கவிதையுலகில் சு. வில்வரத்தினம் கவிதைகள் மகத்தான முன்னசைவுகளை உண்டாக்கியவை. குறியீடுகளாலும் படிமங்களாலாலுமாகிய ஆன்மீக நிலவெளி சு.வியினுடையது. ஈழநிலத்தின் புறக்காட்சிகளும் அகத்தீவிரங்களும் …

வியப்புத் துடிக்கும் குழந்தையின் விரல்கள்

சுயம் பற்றிய ஆதாரமான கேள்விகள் தத்துவம் ஆன்மீகம் கலை இம்மூன்று தளங்களிலும் எழும் ஆதாரமான வடிவம் கவிதை. நான் யார்? எதன் பொருட்டு இந்த வாழ்க்கை அளிக்கப்பட்டிருக்கிறது போன்ற பல கேள்விகள் கவிதை வரிகளுக்கு நிகரானவை. எல்லா அறிவுத் தளங்களிலும் வேறு வேறு பொருள் கொள்ளப்படுபவை. சுந்தர ராமசாமி எழுதிய கவிதைகள் அவரது புனைவுலகின் மையக் கேள்விகளின் அடிப்படைகளைக் கொண்டவை. அவை தன் நிழல் எங்கிருந்து உருவாகிறது என்ற தற்போதத்தை …