Skip to content

Kirishanth

Blog

Menu
Menu

சிரிக்கும் புத்தனுக்கு

Posted on September 28, 2025September 28, 2025 by Kiri santh

தமிழின் மகத்தான ஒரு உடல்
மலர்ப்பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தது
அவனருகே மலர் மாலைகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன
அவன் முன்னே சொற்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன

இடையிடையில் யார் யாரோ அழும் ஒலிகள்
கேவலைப் போல
ஒரு மெளனமான மலரிதழ் விழுவதைப் போல
முகத்தை அள்ளிக் கொள்வதைப் போல

அவ்வளவு பெரிய உருவம் என நான் எண்ணியிருந்த அந்தக் குழந்தை
ஒரு சாதாரண மலர்ப்பேழைக்குள் படுத்திருக்கிறது

ஒரு மொழி என்பது
தன் வாலைச் சுருட்டி வாயில் கவ்வும் பாம்பு என கூறுபவன்
உடலை உடல் கடந்தது என நம்புபவன்
இரத்தக் குழாய்கள் வெடித்துச் சிதற இறந்தவன்
ஒரு முத்தம் போல
நூற்றாண்டுகளாக மொழியின் கன்னத்தில் இருக்கப் போகிறவன்

போய் வருக பெருங்குழந்தையே
உடல் கடந்த உடலே.

(ரமேஷ் பிரேதனுக்கு)

https://www.youtube.com/live/09oYaHeTbJc?si=AXXF9NlP4NRPqVfR

வாசித்தவர்கள் : 337

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு

வாசிக்க

  • அஞ்சலி : நன்மிளிர் (2,150)
  • சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும் (1,996)
  • காதலின் முன் பருவம் (1,969)
  • சராசரிகளுடன் உரையாடுதல் (1,903)
  • விடுதலையில் கவிதை (1,882)
  • Blog
  • அபிப்பிராயங்கள்
  • அரசியல்
  • அழிகளம்
  • அனுபவம்
  • ஆக்கங்கள்
  • உரைகள்
  • கடிதங்கள்
  • கவிதை
  • சிறுகதைகள்
  • நிகழ்வுகள்
  • மொழிபெயர்ப்பு
©2026 Kirishanth | Design: Newspaperly WordPress Theme