(குறிப்பு: ஆதி பார்த்திபன், யுத்தத்திற்குப் பின் உருவான புதிய தலைமுறைக் கவிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். அவரது பெரும்பாலான புனைவுகள் மற்றும் கவிதைகள் அன்பின் தீராத அலைவை, முன் பருவக் காதலின் குழப்பங்களையும் மனநிலைகளையும் எழுதிச்செல்பவை. இது இவரது ஆரம்பகால எழுத்துகளில் ஒன்று) கடிதம் ஒன்று…
முத்துச் சரளைகளின் அறியாத கரையில்
தமிழின் நெடுங்கவிதை வரலாற்றில் ஆதி வாழ்வையும் காமத்தையும் எழுதிய பெண்களில் பெரும்பாலும் எஞ்சியிருப்பது பக்தியெனும் தன்னிலை. காரைக்காலம்மையார், ஒளவையார், ஆண்டாள் என்று தொடங்கும் கவிஞர்களின் சொல்லாழத்தை நவீன காலகட்ட அறிதல்கள் தன்னிலைகளை மாற்றியமைத்தன. பக்தியை உருமாற்றின. தானும் ஒரு நிகர் உயிரியெனும் ஆற்றல் எழுந்து…
சிதறுண்ட நிலத்தின் சொற்கள்
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (JNU) தமிழ்த்துறையிலும் தில்லிகை என்ற தமிழ் அமைப்பிலும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஈழத்துக் கவிதைகள் பற்றிய புறச் சித்திரத்தை உருவாக்குதல் பற்றியும் சமகால ஈழத்து இலக்கியச் சூழல் பற்றியும் இரண்டு உரைகளை ஆற்றியிருந்தேன்….
யசு, நீ மட்டும்
மூடப்பட்டிருக்கும் புத்தரின் இமைகளுக்குள் நித்தியமாய் உறையும் யசோதரையின் மாசற்ற துயரம் என்பது ஆணுலகு உண்டாக்கியிருக்கும் ஞானம் என்ற கருத்துருவாக்கத்தின் மீதான தத்துவ விசாரணை. இத்தனை நூற்றாண்டுகளாய் நாம் அறியும் ஞானம் என்பது பெண் வெறுப்பின் அல்லது விலகலின் பின்னே சாத்தியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றன பெரும்பாலான கதைகள்….
பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 03
பிரியத்துக்குரிய கிரிக்கு, அகச் சிக்கலை வழமைக்கு மாறாக, வாசிக்க நினைக்கும் வாசகருக்கு கொஞ்சம் விளங்கும் படியும் எழுதியிருப்பது குறித்து – இது உரையாடலுக்கான களங்களை அமைத்து தருமென்பதில் நம்பிக்கை கொள்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை ஒரு பொதுவெளியில் தனியே வாசிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. வாசித்தவுடன் அதனை…
பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம் 02
வணக்கம், உங்களுடைய பிரியத்துக்குரிய பெண்ணுக்கு என்ற புனைவில் இருந்து சில கேள்விகள் எனக்கு, ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் இருக்க முடியும் என்ற விடயத்தை பலரும் விவாதித்து வருகின்ற வேளையில் அதை அடிப்படையாக வைத்து பல பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதும் ஒடுக்குமுறைகளை எதிர்நோக்குவதும்…
பிரியத்துக்குரிய பெண்ணுக்கு: கடிதம்
ஒரு போராட்டம் செய்யப்பட்டு இருக்கிறது இதற்குள்ளே. ஒரு யதார்த்தம் இருக்கிறது. அதேநேரம் புரட்சி இருக்கிறது. என் ஆண்மையின் அத்தனை விறைப்புத் தனங்களுக்குள்ளும் உள்ளே மரத்துபோன உணர்சி மிக்க பரம ரகசியமாக நீள நினைக்கும் காமத் தீயின் கட்டுக்கடங்காத ஆர்வத்தில் வரும் கோளாறுகளை எழுதும் அந்தத்…
ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 03
ஆயுத வழி விடுதலைப்போரில் ஆர்வங் கொண்டெழுந்தோர் பெருமளவு இளைஞர்களே. ஆயுத வழியின் தொடக்க காலத்திலிருந்தே பாடசாலைக் கல்வியை இடையில் நிறுத்திக்கொண்டு பலர் விடுதலை இயக்கங்களில் இணைந்தனர். மிக இளம் வயதில் அவர்கள் கேட்டவற்றையும் அறிந்தவற்றையும் கொண்டு சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகளை வெல்ல யுத்தமே வழியென்று…
ஒளி வற்றிய சுடரில் எஞ்சும் நிறங்கள்: 02
90 களில் வெளியான நட்சத்திரன் செவ்விந்தியனின் ‘வசந்தம் 91’, பா. அகிலனின் ‘பதுங்குகுழி நாட்கள்’, அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ ஆகிய கவிதைத் தொகுப்புகள், ஈழத்தமிழ் கவிதை மொழியில் முக்கியமான கவித்துவ அடைவுகளைக் கொண்டவை. வனத்தின் அழைப்புத் தொகுதியில் போருக்குச் செல்பவர்கள் பற்றிய மதிப்பும் போர்…
பொருள் கொள்ளுதலும் எதிர் கொள்ளுதலும்
இன்று மாலை ‘பிரியத்துக்குரிய பெண்ணுக்கு’ என்ற புனைவுப் பிரதியொன்றை வெளியிட்டிருந்தேன். அதையொட்டிப் பல நண்பர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன பிரச்சினை உனக்கு?. இது ஒரு மோசமான பிரதி, ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துகிறது. பெண்களை இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்கிறாய் என்று ஏசிக்கொண்டிருக்கிறார்கள். இதில் இரண்டு விடயங்களை…