தற்புனைவு : ஒரு கேள்வி

“உண்மைக்கும் புனைவுக்கும் இடையில ஒரு புது வெளிய உருவாக்கி அதை ஏன் இவ்வளவுக்கு justify பண்ணணும்? எனக்கு விளங்கல்ல” என்று நண்பரொருவர் கேள்வி அனுப்பியிருந்தார். தற்புனைவு பற்றி படுபட்சி தொடர்பில் உண்டாகியிருக்கும் விவாதத்தின் தொடர்ச்சியாகவே இந்தக் கேள்வி வந்திருக்கிறது. உண்மை, புனைவு இரண்டையும் இலக்கியத்தில் ஏன் கடுமையாக வெட்டி வகுக்கிறோம் என்பதிலிருந்து தொடங்கலாம். உண்மைக்கு தெளிவான தர்க்கம் மற்றும் ஆதார அடிப்படை இருக்க வேண்டும். புனைவு அதை ஒரு பொருட்டாக …

கலையும் வாலும் : 2

இளவயதில் கவிதைகளை எழுதும் பொழுது எடிட்டிங் பற்றிய என் பார்வை வேறாக இருந்தது. இன்றுவரை என் எந்தக் கவிதைகளும் பிற எவராலும் செப்பனிடப்படவில்லை. கவிதையைப் பொறுத்த வரையில் அது சொல்லுளியின் முனை போன்றது. கூர்ந்தது, ஆகவே பிறிதை அனுமதிக்கும் இடைவெளி அற்றது. நானே கூட என் கவிதைகளை அந்த நேர மன எழுச்சிக்கு அப்பால் எடிட் செய்ததில்லை. சில நிமிடங்களில் தான் என் ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்டன. ஆனால் இது …

கலையும் வாலும்

புனைவெழுத்தில் செம்மையாக்கம் (Editing) பற்றிய உரையாடல்கள் ‘படுபட்சி’ எனும் தற்புனைவு சார்ந்து பேஸ்புக்கில் நிகழ்ந்து வருவதாக நண்பர்கள் சிலர் அக்குறிப்புகளை அனுப்பியிருந்தனர். எழுத்தாளர்களான டிசே இளங்கோ, அ. யேசுராசா, பெருமாள் முருகன், ஷோபா சக்தி ஆகியோர் எழுதியவற்றை வாசித்தேன். டிலுக்சன் மோகன் என்பவரது கதையே படுபட்சி, அதில் செம்மையாக்க உதவியை ஷோபா சக்தி செய்திருக்கிறார். நான் படுபட்சி இன்னமும் வாசிக்கவில்லை. இந்த இடத்தில் இவர்களது வாத எல்லைகளுக்கு வெளியே செம்மையாக்கம் …

130: செண்டுவெளியாட்டம் : 02

“மானுடர் அதிகாரத்தின் முன்னரே தலை பணிவர். அதுவும் பொய்யமைவே. எங்கும் எதிலும் பணிய முடியாதவர் என எவருமில்லை. பணிவில் எஞ்சும் ஆணவமே பணிபவரின் மெய்யுரு.அறமும் அதிகாரம் கொண்டதே. அதன் அதிகாரமே முற்றுறுதியாதன வல்லமை கொண்டது. ஆகவே அரசர்கள் அதை அஞ்சுகிறார்கள். காவியர்கள் அதை வணங்கி பிறிதொரு அறத் தெய்வத்தில் அதை நிலை நிறுத்துகிறார்கள். வீரர்கள் அதைக் காக்கும் மானுடக் கவசங்கள் மட்டுமே” என உரத்த குரலில் சொல் பிளிறிக் கொண்டிருந்தான் …

129: செண்டுவெளியாட்டம்

விண்யாழி நிழல் விழும் நீண்ட பனைமரங்களின் காட்டு வழி நால்வருடனும் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். கொற்றனும் ஓசையிலானும் சொல்லாடிக் கொண்டிருந்தனர். இரண்டு நாய்க்குட்டிகள் வால்குழைத்துக் கடித்து சிற்றுறுமல் உறுமி பாய்ந்து கவ்விக் கொள்வது போல இருவரும் சீறிக்கொண்டு வந்தனர். நிரதையும் திருதையும் அவர்களின் சொற்களின் பொருளின்மைகளைச் சுட்டி பெருங்குரலில் சிரித்து அவர்கள் முதுகுகளை யானைத் தோல்களென அறைந்தார்கள். கொற்றனின் இளந்தோல் கன்றி மெல்ல வீங்குமளவு நிரதை அவனை அறைந்து …

128: நதிவழி

ஒருவன் எண்ணப் போவதை அக்கணத்திற்கு முன்னரே அறிபவரே தோழனும் எதிரியும் என எண்ணிக் கொண்டான் தமிழ்ச்செல்வன். அவனது நரையிழைத்த குழல் காற்றின் துள்ளலில் நலுங்கிக் கொண்டிருந்தது. காவற் கோபுரத்திலிருந்து மீண்டு தன் ஊன்றுகோல் கற்தரையில் எழுப்பும் ஒலியை ஊழ்க நுண்சொல்லென எண்ணியபடி நடந்து சென்று சொல்லவையில் அமர்ந்து தனித்திருந்தான். சாளரத்தால் மென்சாம்பல் வெளிச்சம் சொல்லவைக்குள் நிறைந்திருந்தது. கருங்கல்லாலான நிலத்தில் மிருகத் தோலாலான போர்வைகள் இடப்பட்டிருந்தன. ஆசனங்கள் வெறுமையில் அமர்ந்திருந்தன. திரைச்சீலைகளை …

127: மழைக்குயில் : 03

மானுடரில் சிலருள் எரியணையாக் கலமொன்று தன்னைத் தானே அமைத்துக் கொண்டு மண் நிகழ்கிறது. வற்றாத தாகத்தின் நாக்குகளால் அம்மானுடரை அவரின் இறுதிக்கணம் வரை குன்றாத தவிப்புக் கொள்ளச் செய்கிறது. எதனாலும் எரிக்கப்படாத எதானாலும் பெருக்கப்படாத எதனாலும் அழிக்கப்படாத அது அதனாலேயே முற்றமைகிறது. அதைத் தாகநாவு என்றனர் நூலோர். நீலன் நின்றிருந்த பெருங்கணத்தில் அக்கலம் வெகுண்டெழுந்து என்னை எரியால் போர்த்துக என அறைகூவியதைக் கேட்டார் சூர்ப்பனகர். அவர் அறிவார் அக்கலம் அங்கனம் …

126: மழைக்குயில் : 02

நீலன் உருவிய வாளுடன் சங்கறுத்து விழுவது போல சூர்ப்பனகரின் கனவு விரிந்தது. நீலன் மன்றில் உருகம் ஏந்தி என்னை அன்னையர் எவரேனும் கொல்க என இரந்து நிற்பவன் போல எழுந்தபோது தனது அனிச்சையாய் கால்கள் எழுந்து நிற்பதை தானே தனக்குள் வியப்புடன் நோக்கினார். அதுவொரு நாடகமில்லை என்பதை அவர் அகமறியும். அங்கனம் எவரேனும் அன்னையர் “கொடு உன் வாளை. இன்றோடு செத்தொழி” என வாளைப் பற்றி எழுந்திருந்தால் அவன் மெய்யாகவே …

125: மழைக்குயில்

சூர்ப்பனகர் தனது இல்லத்தின் மேல்முகப்பில் தாழ்வாக இடப்பட்டிருந்த மூங்கில் கழிகளாலான கூரையின் கீழ் நின்று பட்டினத்தை நோக்கிக் கொண்டிருந்தார். இளமழையின் புகைத்தூவிகள் அந்தரத்திலிருந்து மண்ணுக்கும் மரங்களுக்கும் பருப்பொருட்களனைத்துக்குமென வீழ்வதை தன் சிவப்பேறிய விழிகளால் துழாவினார். அவரது நடை பருத்த வயிற்றின் நடனத்திற்கெனக் கால்கள் கொண்டது போல அதையே சிரசென்று எண்ணியது போல வேடிக்கையூட்டியது. சூர்ப்பனகர் தனக்குத் தானே தற்பகடி சொல்லிச் சிரிப்பவர். அவை பிறருக்குக் கேட்டுவிடக் கூடாதென்ற கூருளம் கொண்டவரும் …

124: ஆழிசூடிகை : 04

“துயருற்ற நாளொன்றில் குயவன் வனைந்த குடம் போலக் கிடப்பது என் அகம்” என உதடுகளுக்குள் சொற்களை மடித்து மடித்துச் சொன்னார் வேறுகாடார். இருதியாள் அச்சொற்களைக் கேட்டவளெனத் தன் பெருமேனியை தூணில் சாய்த்து கால்களைத் திண்ணையில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள். இளமழை எப்பிசிறுமின்றி வந்தது போலவே நின்று பொழிந்து கொண்டிருந்தது. அத்திரிகள் கூட்டமொன்று வண்டில்களுடன் உரசிக் கொண்டும் மரங்களினடியில் சாம்பலும் மண் வண்ணமும் கொண்ட மேனிகள் நனைந்து ஊறிக் கொண்டிருந்தன. போர்வையில் …