சினிமாவா இலக்கியமா

சினிமாவா இலக்கியமா சரியாக ஒரு விடயத்தை கடத்தும். இது அரசியல் கேள்வி தான். தமிழர்களின் தேசநிலைப்பாட்டை இலக்கியங்கள் வாயிலாக நிறுவுவதா இல்லை சல்லியர்கள், மேதகு போல சினிமாக்களினால் விளங்கப்படுத்துவது சரியாக அதை கடத்துமா. தணிக்கை தடைகளை கடந்து உண்மை தாங்கும் அல்லது உணர்வு தாங்கும் பணி எதில் சரியாக அமையும். Rtr Kirishanth * வணக்கம், இலக்கியம் தான். அதில் மாற்றம் என்றும் நிகழ முடியாது. இலக்கியம் மொழியின் ஊடாக …

ஏறி வருதல்

உலகம் முழுவதிலுமுள்ள வணிக சினிமா என்பது கேளிக்கையினூடாகவும் மிகைப் புனைவுக் காட்சிகளின் ஊடாகவும் பெரும்பான்மைப் பார்வையாளர்களின் பார்வைக்குள் சலனங்களை ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்வதையே வணிக சினிமாவின் வெற்றியாக ஈட்டுகின்றன. இறுதி யுத்தத்திற்குப் பின்னரான ஈழத்து சினிமாவின் முழுநீளத் திரைப்படங்களை அவை உருவாகத் தொடங்கிய காலகட்டத்திலிருந்தே ஒரு பார்வையாளராக நெருக்கமாக அவதானித்து வருகிறேன். ஒவ்வொரு சிறு வெற்றியும் முன்னேற்றமும் என்னை உவகை கொள்ளச் செய்திருக்கிறது. அது ஒரு திரளின் கனவும் இந்த …

டக் டிக் டோஸ்

ஈழத்தில் சுயாதீன சினிமாக் கனவுடன் இளைஞர்கள் உருவாக ஆரம்பித்த காலங்களில் நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தேன். 2012 காலகட்டமது. யுத்தம் முடிவடைந்த பின் அதன் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகளும் குறும்பட உருவாக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எனது பள்ளிக்கூடத்திலிருந்தும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள். AAA movies என்ற நிறுவனம், அப்போது பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மறைந்த இயக்குனர் கேசவராஜா அதனை உருவாக்கி இயக்கினார். அப்பொழுது …

வெடிமணியமும் இடியன் துவக்கும்

மதிசுதாவின் வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறு படம் பார்த்தேன். தொடக்கத்திலே மதிசுதா ஒரு முழு நீளப்படத்திற்கு எழுதப்பட்ட திட்டமிடப்பட்ட, கதையைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் சிறுபடமாக எடுத்து முடித்ததாகப் போட்டிருந்தார். ‘நல்லபடம்’ எடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஈழ சினிமா கொடுக்க கூடிய முதல் நெருக்கடி, பணம். எனக்கு அதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. அச்சூழலை மாற்ற வேண்டும் என்பதிலும் பெருத்த உடன்பாடு உள்ளது. ஆனால் இது படத்திலே எழுதப்பட்ட ப்ரேமாக …

எதிர்ப்பின் கொண்டாட்டம்

“The Casteless collective ” நீலம் பண்பாட்டு மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன இசைக்குழு. தமிழ்நாட்டில் எனக்குப் பிடித்த “குரங்கன்” சுயாதீன இசைக்குழுவின் ‘தென்மா’ தான் இந்த புதிய குழுவினதும் இசைத்தயாரிப்பைச் செய்கிறார். பா. ரஞ்சித் தனது நண்பர்களுடன் இணைந்து நிகழ்த்தும் இந்த முன்னெடுப்பு மிக முக்கியமான பண்பாட்டு அரசியல் நிகழ்வு. அரசியல் மயப்படுத்தல் தான் இந்த இசையின் ஒரே குரல். சாதியின் பெயரில் தங்களுக்கு நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற அநீதிகளின் …

இலக்கியம் எனும் இயக்கம்

இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு மனிதர்கள் அல்லது அமைப்புகள் அந்த அந்த காலகட்டத்தின் இயங்கு விசையாக இருப்பர். 2012 ஆம் ஆண்டு நான் பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் வேலணையூர் தாஸ் முகநூல் ஊடாக சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் படித்த பள்ளிக்கூடத்திற்குப் பக்கத்தில் தான் அவரது வீடிருந்தது. பின் பல காலம் பிள்ளைகளின் படிப்பிற்காக அந்த இடத்திலேயே சுற்றிச் சுற்றி வாடகை வீடுகளில் தாங்கினார். ஒரு சித்தாயுர்வேத வைத்தியர். …

கண்ணீரில் விளக்கெரியும் தேசம்

கண்ணகி, அறச் சீற்றத்தின் படிமம். நீதி கேட்டு அரசை எரித்த பெண்ணின் கதை தான் கண்ணகியம்மனின் கதை. அவள் முல்லைத்தீவு மக்களுக்கு நெருக்கமானதொரு தெய்வம். இறுதியுத்தத்தின் பின்னர் இழந்த புத்திரருக்காகவும் மாண்ட சோதரருக்கும் கண்ணீர் விட்டு இன்றும் நூறு நூறு நாட்களாய் தெருவிலிருக்கும் ஆயிரம் ஆயிரம் தாய்மாரின் படிமம். ஏதோவொரு காலத்தில் இந்த நிலத்தில் அந்தப் பெண்ணின் கால் நடந்துதானிருக்கும். இன்று ஒரு பெரும் விடுதலைப் போராட்டம், லட்சக் கணக்கில் …

சினிமாவுக்கோர் இயக்கம்

ஒரு மக்கள் இயக்கமென்பது மக்களிடமிருந்து எழுச்சி பெற்று வருவது. ‘Chikpo Movement ‘ என்ற ஆவணப்படத்தை நிகழ் படத்தை எப்படி ஒரு இயக்கமாக மாற்றுவது என்பது தொடர்பான கலந்துரையாடலின் முதலாவது உரையாடல் பகுதியாகப் பார்த்திருந்தோம். அந்த ஆவணப்படம், ஒரு மலைப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் தமது காடுகளுக்கு எதிராக வந்த சக்திகளிடமிருந்து எப்படி தமது காடுகளைக் காத்தனர். அதனைக் காப்பதற்கு அவர்கள் எப்படி ஒரு குழுவாகத் திரண்டனர். பின்னர் எப்படி ஒரு …

ராஷ்மோன் மனநிலை

ஆம், அப்படித் தான் சொல்ல முடியும் எளிமையான ஒரு கதை. விசாரணையின் பின் அடைமழை பொழிந்து கொண்டிருக்கும் போது கைவிடப்பட்ட கோயிலின் தாழ்வாரத்தில் ஒதுங்கி நிற்கும் துறவிக்கும் கிழவனுக்கும் வழிப்போக்கன் ஒருவனுக்குமிடையில் இடம்பெறும் உரையாடலாகவே காட்சிகள் அகல்கின்றன. காட்டு வழியால் செல்லும் போது ஒரு திருடனால் தனது கணவன் தோற்கடிக்கப்பட்டு கட்டப்பட்ட பின்னர் மனைவி பாலியல் உறவுக்கு உட் படுத்தப்படுகிறாள். அதற்கான விசாரணை இடம்பெறுகிறது அதன் போது குற்றம் சாட்டப்பட்டவர், …

சுயசித்திரம் எனும் நீரில் கலங்கும் முகம்

கொஞ்சம் கொஞ்சமாக மனித முகங்கள் சலிப்பூட்டத் தொடங்கிவிட்டது என்ற எண்ணம் நீண்டகாலமாகவே மனதில் கசிந்துகொண்டிருந்தது. நிலக் காட்சிகளே மனசை ஆசுவாசப்படுத்துவதாக இருக்கிறது. எங்கும் விரியும் நிறங்களும் உலகமும் காலின் கீழேயும் கண்ணின் முன்னேயும் விரிவது தான் எஞ்சியிருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மனித முகங்களையிட்டு அஞ்சுகிறேன். அவற்றில் உள்ள வெறுப்பும் அன்பற்ற புன்னகையும் நச்சுப் புகையை முகத்திலெறிவது போலிருக்கிறது. ஒரு சில மனிதர்களதும் குழந்தைகளின் முகங்களும் மட்டுமே முகம் என்றால் நினைவில் …