பவளக்கொடி
வாழ்க்கையைப் போல இவ்வளவு பின்னல்கள் கொண்ட கதையை எந்த எழுத்தாளராலும் எழுத முடியாது என்ற உண்மையைச் சந்திரன் டெய்லருக்கு நான் நூற்றியெட்டாவது முறையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். கூர்மையில் கிளி போன்றதும் அகலத்தில் கறி மிளகாய் போன்றதுமான அவரது மூக்கில் மூக்குக் கண்ணாடி அரைவாசிக்கும் கீழே வழுக்கியிருந்தது. இடையிலிருந்த யன்னல் அளவு இடைவெளியால் சந்திரன் டெய்லர் என்னை நிமிர்ந்து பார்த்த பின்னர் நூற்றியெட்டு முறையும் அளித்த அதே பதிலை தையல் மெசினைக் …
