காலச்சுவடு: கவிதைகள்

மார்ச் மாதக் காலச்சுவடு இதழில் எனது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. அட்டைப்படத்தில் எனது பெயரைத் தவறுதலாகக் கிரிஷாந்த் என்று அச்சிட்டுவிட்டார்கள். உள் வடிவமைப்பில் கிரிசாந் என்றே போட்டிருக்கிறார்கள். அட்டைப்படத்தில் அப்படி வெளிவந்தமை, ஒரு தவறு என்று ஆசிரியர் குழு நண்பரொருவர் போனில் அழைத்துப் பேசினார், இதெல்லாம் ஒரு பிரச்சினையா பாஸ் என்று சொன்னேன். கவிதைகளை வாசித்து உங்களது கருத்துகளை அனுப்பி வையுங்கள். பெயரில் என்ன இருக்கிறது என்றல்லவா நமது கவி மூப்பன் …

சராசரிகளுடன் உரையாடுதல்

சமூகத்தின் பெரும்பான்மை என்ற தொகுதி சராசரிகளின் திரள். எந்தவொரு அறிவியக்கத் தரப்பும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் இடைவிடாது உரையாடிக் கொண்டிருப்பது சராசரிகளுடன் தான். சாராசரிகளின்றிச் சமூகமில்லை. அவர்களைக் கேலியாகவோ வெறுப்புடனோ ஒரு எழுத்தாளர் அணுகத் தேவையில்லை. முகநூலில் என் மீது நண்பர் ஒருவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதையொட்டி உருவான உரையாடலுக்காவும் எனது புனைவு ஒன்றிற்கு வந்த வாசகர் கடிதத்திற்கான எதிர்வினையொன்றிற்கும் நான் பதிலளித்துக் கொண்டிருந்தேன். நண்பருக்கு முகநூலிலும் எதிர்வினைக்கு இணையத் …

திராவகத்தின் மொழி

ஆவேசம் கவிதைக்குள் புயற் காற்றின் கண்ணென உறைகையில் கலை நிகழும் எழுத்துகள் ஆழியாளினுடையவை. பெண் மனம் அனுபவிக்கும் உலகத்தில் ஆவேசம் ஓர் எதிர்கொள் முறையென எழுதப்பட்டே வருகிறது. அவை அம்மனங்களின் நீதியுணர்ச்சியிலிருந்தும் அன்றாடத்தின் அவநம்பிக்கையிலிருந்தும் எழுந்து இன்னொரு புறவுலகை உருவாக்குகின்றன. அது பெண்கள் உரத்துப் பேசும் உலகம். இலக்கியத்திலும் பண்பாட்டிலும் அதற்கு முக்கியமான பங்களிப்புண்டு. எவ்வளவு ஆவேசமாகவும் அம்மொழி நிகழலாம். ஆழியாளின் கவிதைகளில் உள்ள முக்கியமான அம்சம் ஆவேசம். அவரது …

சுரண்டலெனும் கலை: எதிர்வினையும் பதிலும்

(குறிப்பு: எனது எழுத்துக்களுக்கான உரையாடலை இணையத்தளத்தில் மாத்திரமே செய்வேன். சமூக வலைத்தளங்கள் அவற்றைப் பகிர்வதற்கானவை மட்டுமே. வாசகர்கள் தங்கள் பார்வைகளை, கேள்விகளை kirishanth300@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். அப்படி அனுப்பி வைக்கப்படாத வேறு எந்த எதிர்வினைகளுக்கும் இனி பதிலளிக்க மாட்டேன்) வணக்கம் சிவா மாலதி, பிரியத்துக்குரிய பெண் என்ற புனைவுக்கான கடித பதிலொன்று குறித்த உங்களது அவதானங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அப்புனைவு எதிர் உரையாடற் தன்மை கொண்டது. …

ஆதித் தூசு

போகன் சங்கரின் மொழியுலகிற்கு அலாதியானது என்று பெயர். அதற்குள் யாரும் எதுவும் சுந்தந்திரமாக வந்தும் வாழ்ந்தும் விலகியும் செல்லலாம். மனிதர்களின் அக உலகின் வினோதங்களை எழுதும் பொழுது, தோற்பாவைக் கயிறென அவர் விரல்கள் மொழியை ஆட்டுகின்றன. அவரது கவிதைகளில் உள்ள சுயவிசாரணை எனும் பாவனை சாதரண வாசகருக்கு எரிச்சலையும் கோபத்தையும் மூட்டக்கூடியது. அவை பரிகாசத்தினதும் எள்ளலதும் உணர்கொம்புகள் கொண்டவை. அதனால் சராசரி அரசியல் சரிநிலைகள் கொண்டவர்களின் அறிவு மூர்க்கமாகச் சீண்டப்படும். …

சுரண்டலெனும் கலை

(இக் குறிப்பு முகநூலில் சிவா மாலதி அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது. இந்தத் தளத்தில் வெளியாகிய எனது புனைவுக்கு வந்த வாசகர் கடிதமொன்றினை அடிப்படையாக வைத்தே இக் கேள்விகள் அமைந்துள்ளன. அவ்வாசகரின் பெயரை அவரது அனுமதியின்றி முகநூலில் பயன்படுத்துவது தவறானது. எனக்கு வரும் கடிதங்களில் ஒருவர் பெயரைப் பயன்படுத்துவதன் முன் அவரின் அனுமதியைக் கேட்பதுண்டு. அவ்வாறு இல்லையென்றால் மாற்றுப்பெயரைப் பயன்படுத்துவதுண்டு. இணையத் தளத்தில் உள்ள வாசக உரையாடலுக்கும் முகநூலுக்கும் இடையில் நெறிமுறை வித்தியாசங்கள் …

நறுங்காற்றின் இசை

ஈழத்தின் முதலாவது பெண்ணிய அலையின் முக்கியமான கவிஞர்களில் ஊர்வசியும் ஒருவர். 1980 களின் முன்னும் பின்னுமென நிகழ்ந்து வந்த சமூக அசைவுகளின் வழியாவகவும், உருவாகி வந்த பெண் என்ற தன்னிலையின் சிக்கல்களை உரையாடும் வெளியும், பல்வேறு ஆக்கங்களை எழுதும் செயற்படும் காலத்தை உதிக்க வைத்தது. பெண்கள் சந்ததி உற்பத்திச் சாதனம் மட்டுமல்ல. அவர்களது உழைப்புகளிலிருந்து விடுதலையும் சம உரிமைகளும் அகத் தேவைகளும் விரிவாக உரையாடப்படத் தொடங்கிய காலமது. சொல்லாத சேதிகள் …

மல்லிகைக் கொடியில் ஒரு பாகற்காய்

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்த 90 களின் பிற்பகுதியில் எழுந்து வந்த இளைய தலைமுறையில் எஸ்போஸ் என அழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகர் மொழியின் அடுக்குகளில் இன்னொரு திசையைத் திறந்தார். அவரது சொற்தேர்வுகள் புதிதான சொல்லிணைவுகளை இசைத்தன்மையை உண்டாக்கின. அவருக்கு அறமோ காதலோ, சீற்றமே மொழி. அவரது சொல்முறையினால் ஈர்க்கப்பட்டு உருவாகிய இளம் தலைமுறையினரில் சித்தாந்தனும் தானா விஷ்ணுவும் முக்கியமானவர்கள். அவர்களின் சொற் தேர்வுகளிலும் இணைவுகளிலும் எஸ் போஸ் இன்னமும் புன்னகைத்தபடி …

டக் டிக் டோஸ்

ஈழத்தில் சுயாதீன சினிமாக் கனவுடன் இளைஞர்கள் உருவாக ஆரம்பித்த காலங்களில் நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்துக் கொண்டிருந்தேன். 2012 காலகட்டமது. யுத்தம் முடிவடைந்த பின் அதன் கதைகளைத் திரைப்படமாக்கும் முயற்சிகளும் குறும்பட உருவாக்கங்களும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எனது பள்ளிக்கூடத்திலிருந்தும் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றினார்கள். AAA movies என்ற நிறுவனம், அப்போது பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். மறைந்த இயக்குனர் கேசவராஜா அதனை உருவாக்கி இயக்கினார். அப்பொழுது …

தடை செய்யப்பட்ட புத்தகம்: இரு மொழிபெயர்ப்புகள்

தடை செய்யப்பட்ட புத்தகம் நண்பா,தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடிப்படிக்கும்ஒருவனையாவது உனக்குத் தெரிந்திருந்தால்சவப்பெட்டிகள் செய்யும் யாரையேனும் பற்றிநீ அறிந்து வைத்திருந்தால்அவதாரங்களின் வருகையில் நம்பிக்கையில்லையென்றால்நூறாண்டுகளுக்கு ஒரே ஒரு கவிதையினை எழுதும்கவிஞனை நீ சந்தித்திருந்தால்யுத்தம் நடந்த கதைகளைச் சொல்லும்பாட்டிகள், எங்கேனும் இன்னுமிருந்தால்இறந்து போன காதலிகளின் நினைவாக வைத்திருக்கும்பரிசுப் பொருட்கள் எதையாவதுதற்செயலாய் நீ தொட நேர்ந்தால்அலையும் கடலிலிருந்தோ அல்லதுஅக் காட்டிலிருந்தோ, ஏதோ ஒரு வாசனைஉன்னை அதனுள் இழுத்திருந்தால்அழிக்கப்பட்டவர்களின் நினைவாக நீ ஏற்றிய தீபத்தில்யாரேனும் சிறு நீர் …